அமெரிக்காவைப் புரட்டிப் போட்ட 'ஜூனோ'.. 3 அடி அளவுக்கு ஐஸ் கட்டிகள்... எங்கு பார்த்தாலும் வெள்ளம்!
பாஸ்டன்: அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதிகளில் புனிப் புயல் ஜூனோ சுழற்றியடித்து வருகிறது. அங்கு பல பகுதிகளில் பனிக் கட்டிகளாக குவிந்து கிடக்கின்றன. பல பகுதிகளில் மழை வெள்ளமாகவும் உள்ளது.
கனக்டிகட், ரோட் தீவு, மாசசூசட்ஸ், நியூ ஹாம்ப்ஷயர், மெய்ன் மாகாணங்களில் கடும் பனிப் புயல் வீசி வருகிறது. பல கடலோர நகரங்களில் தடுப்புச் சுவர்கள் உடைந்தன பல நகரங்களில் 36 இன்ச் அளவுக்கு ஐஸ் கட்டிகள் மூடியிருக்கின்றன. மாசசூசட்ஸ் மாகாணத்தில் பல நகரங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

பெரும் சிரமத்தை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூயார்க் நகரம் பேரபாயத்திலிருந்து தப்பியது. அங்கு பெரும் பாதிப்பை புயல் இதுவரை ஏற்படுத்தவில்லை.
மாசசூசட்ஸ் மாகாணத்தில் 30,000 பேர் மின் விநியோகம் இல்லாமல் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இருப்பினும் அந்த மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் வாகனங்களை ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல நியூயார்க், ரோட் தீவு, கனக்டிகட் மாகாணங்களிலும் வாகனம் ஓட்டுவதற்கான தடை நீங்கியுள்ளது.
கடும் காற்றுடன் பனிப் புயல் வீசுவதோடு மழையும் சுழற்றியடித்ததால் பல பகுதிகளில் வெள்ளக் காடாக இருந்தது. கடல் கொந்தளிப்பும் பல பகுதிகளில் காணப்பட்டது. இதனால் பல இடங்களில் கடலோரங்களில் அமைக்கப்பட்டிருந்த வெள்ளத் தடுப்புச் சுவர்கள் உடைந்தன. இன்றைக்குள் புயல் தீவிரம் குறையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் சற்று நிம்மதியாக உள்ளனர்.
புயல் வீசி வரும் பகுதிகளில் உள்ள வீடுகள் அனைத்தும் பனிப் போர்வையால் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் விடப்பட்ட கார்கள், வாகனங்கள் பனிக் கட்டிக்குள் புதைந்து போயுள்ளன.
கனக்டிகட், மெய்ன், மாசசூசட்ஸ், நியூ ஹாம்ப்ஷயர், ரோட் தீவு மற்றும் நியூயார்க்கின் ஒரு பகுதி இந்த பனிப் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் 30 இன்ச் அளவுக்கு பனிக் கட்டிகள் குவிந்து கிடக்கின்றன. மின்சாரம் பல பகுதிகளில் இல்லை, வாகனங்களை ஓட்ட முடியவில்லை. பனிக் கட்டிகளையும் அகற்ற முடியவில்லை.
மாசசூசட்ஸ் மாகாணம்தான் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. அங்குள்ள லுனன்பர்க் நகரம் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. இங்கு எங்கு பார்த்தாலும் பனிக் கட்டி மலையாக காணப்படுகிறது.
பாஸ்டன் நகரில் 26 இன்ச் அளவுக்கு பனிக் கட்டிகள் தெருக்களில் குவிந்து கிடக்கின்றன. இங்கு மணிக்கு 30 மைல் வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்றும் வீசியது.
மார்ஷ்பீல்ட், சிசுவேட் ஆகிய கடலோர நகரங்களில் 30,000க்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டனர். யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று மாசசூசட்ஸ் மாகாண ஆளுநர் சார்லி பேக்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications