ஆணவக்கொலை.. 21 வயது மாடல் அழகியை சுட்டுக்கொன்ற சகோதரர்.. பாகிஸ்தானில் பயங்கர சம்பவம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடனம் மற்றும் மாடலிங் துறையில் இருந்து விலக மறுத்த 21 வயது பெண்ணை அவரது சகோதரர் துப்பாக்கியால் சுட்டு ஆணவக்கொலை செய்த நெஞ்சை பதற வைக்கும் பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
பாகிஸ்தானில் அவ்வப்போது ஆணவக்கொலை நடந்து வருகின்றது. குறிப்பாக மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றும் பெண்கள் தங்களது குடும்பத்தினரால் கொலை செய்யும் கொடூர சம்பவங்கள் நடக்கின்றன.
தற்போது பஞ்சாப் மகாணத்தில் 21 வயது பெண் கொடூரமான முறையில் அவரது சகோதரரால் ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளார். அதுபற்றிய விபரம் வருமாறு:

21 வயது பெண்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரெனாலா குர்ட் ஒகாரா பகுதியை சேர்ந்தவர் சித்ரா (வயது 21). இவர் மாடலிங் துறையில் சாதிக்க விரும்பினார். இதனால் மாடல் அழகியாகவும், நடனக்கலைஞராகவும் இருந்தார். சித்ராவின் இந்த செயலை குடும்பத்தினர் விரும்பவில்லை. இதுபற்றி அவரிடம் கூறினர்.

எதிர்ப்பை மீறி செயல்பாடு
ஆனால் சித்ரா மாடலிங் மற்றும் நடன துறையில் சாதிக்க விரும்புவதாக அவர்களிடம் எடுத்து கூறினார். இருப்பினும் குடும்பத்தினர் உடன்படவில்லை. மாறாக இத்துறையில் இருப்பது என்பது குடும்ப பாரம்பரியத்துக்கு எதிரானது. இதனால் இந்த துறையில் இருந்து விலக வேண்டும் என குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால் சித்ரா அதை ஏற்கவில்லை. தொடர்ந்து அந்த துறையில் செயல்பட்டு வந்தார்.

வெளியான வீடியோ
இந்நிலையில் பொது இடத்தில் சித்ரா நடனமாடும் வீடியோ ஒன்றை அவரது உறவுக்காரர் பார்த்தார். பிறகு அந்த வீடியோவை சித்ராவின் சகோதரர் ஹம்சாவுக்கு செல்போன் மூலம் அனுப்பினார். இதை பார்த்து ஹம்சா ஆத்திரமடைந்தார். வீட்டுக்கு சென்ற ஹம்சா நடனம் மற்றும் மாடலிங் துறையை உடனடியாக கைவிட வேண்டும் எனக் கூறி சித்ராவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

துப்பாக்கியால் சுட்டு ஆணவக்கொலை
இந்த வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த அவர் அவரை தாக்கினார். மேலும் கோபத்தின் உச்சிக்கு சென்ற அவர் துப்பாக்கி எடுத்து சித்ராவை சுட்டார். இதில் குண்டுபாய்ந்து சித்ரா பரிதாபமாக இறந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் ஹம்சாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கு முன்பு நடந்தது என்ன ?
பாகிஸ்தானை பொறுத்தமட்டில் பழங்குடி மக்கள் வசிக்கும் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அடிக்கடி இத்தகைய ஆணவக்கொலைகள் நடக்கின்றன. முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் 19 வயது நிரம்பிய ஆயிஷா நடனத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். அவரை அவரது முன்னாள் கணவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார். கடந்த 2016-ம் ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த நடிகையும், மாடல் அழகியுமான கந்தீல் பலூச்சை அவரது சகோதரர் கழுத்தை நெரித்து கொலை செய்தது பாகிஸ்தான் மட்டும் இன்றி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications