லெபனானில் குண்டு மழை.. ஐநா படைகள் மீதும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. சர்வதேச நாடுகள் கண்டனம்
டெல் அவிவ்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மத்திய பகுதிகளில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் டாப் தலைவர்களை குறிவைத்து இந்த தாக்குதலை இஸ்ரேல் படைகள் முன்னெடுத்துள்ளன. இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தெற்கு லெபனானில் உள்ள யுனிபில் தலைமையகம் மற்றும் அதன் அருகில் உள்ள ஐநா அமைதிப்படை தளம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 2 பேர் காயம் அடைந்தனர்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஒராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இஸ்ரேலுக்கு எதிரான இந்த போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஈரான் ஆதரவுடன் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா ஆதரவு அளித்து வருகிறது. ஹமாஸ்க்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், ஹிஸ்புல்லா அமைப்பினரின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதிகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், லெபனானின் தலைநகர் பெய்ரூட்டின் மத்திய பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தியது. இது ஒருபக்கம் என்றால் இஸ்ரேலின் தரைவழி படைகள் ஐநா அமைதி குழு தலைமை தலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் இதில் இருவர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்வழி தக்குதலால் பெய்ரூட் நகரத்தில் பல இடங்களில் நேற்று பலத்த சத்தம் கேட்டது. லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கிய பிறகு நடத்தப்படும் மூன்றாவது தாக்குதல் இதுவாகும். லெபனான் சுகாதார அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "பெய்ரூட்டில் இஸ்ரேல் எதிரிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். 117 பேர் காயம் அடைந்தனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக லெபனான் பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா மற்றும் அவருக்கு அடுத்த கட்ட தலைவர்கள் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டனர். ஹிஸ்புல்லாவை ஒழித்து கட்டும் வரை ஓய மாட்டோம் எனக் கூறி இஸ்ரேல் தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளது.
தெற்கு லெபனானில் உள்ள யுனிபில் தலைமையகம் மற்றும் அதன் அருகில் உள்ள ஐநா அமைதிப்படை தளம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 2 பேர் காயம் அடைந்தனர். எனினும், காயம் அடைந்த ஐநா அமைதிப்படை வீரர்கள் எநத நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விவரம் வெளியாகவில்லை. லெபனானில் நிவாரணப்பணிகளுக்காக பல்வேறு நாடுகளின் ராணுவ வீரர்களை உள்ளடக்கிய அமைதிப்படை குழு உள்ளது. இந்த படையில் இந்தியா உள்ளிட்ட வீரர்கள் சேவையாற்றி வருகிறார்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications