கூண்டுக்குள் மனிதர்கள்.. சுதந்திரமாக திரியும் விலங்குகள்.. வித்தியாசமான மிருககாட்சி சாலையை பாருங்க
பீஜிங்: சீனாவில் உள்ள ஜூ ஒன்றில், வித்தியாசமாக நடு காட்டுக்குள் சுற்றித்திரியும் விலங்குகளுக்கு மத்தியில் வைக்கப்பட்டிருக்கும் பெரிய கூண்டுக்குள் இருந்து சுற்றுலா பயணிகள் விலங்குகளை பார்க்கும் திகில் நிறைந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
வனவிலங்குகளையும் அவற்றின் பழக்க வழக்கங்களையும் காண வேண்டும் என்ற ஆர்வம் நாம் அனைவருக்குமே இருக்கத்தான் செய்யும்.
விலங்குகளின் தோற்றம், அதன் பாவனைகள், பயமுறுத்தும் காட்சி போன்றவற்றை நேரடியாக பார்க்க பலருக்கும் விருப்பம் இருக்கும்.

வண்டலூர் உயிரியல் பூங்கா
ஆனால் இதற்காக நேரடியாக வனத்திற்கு சென்றுவிட முடியாது. மீறி சென்றாலும் உயிருடன் திரும்புவது என்பது நிச்சயம் இல்லாததே. நமது ஊர் சட்டங்களும் அதற்கு அனுமதிக்காது. இதனால், டிஸ்கவரி உள்ளிட்ட சேனல்களில் நாம் வனவிலங்குகளை கண்டு ரசித்தாலும் அதை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும். இதற்காகத்தான் பல இடங்களில் ஜூ (உயிரியல் பூங்காக்கள்)க்கள் உள்ளன. சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கூட மக்கள் அதிகளவில் செல்வது வழக்கம்.

விலங்குகளுக்கு சுதந்திரம்.. மனிதர்களுக்கு கூண்டு..
இத்தகைய உயிரியல் பூங்காக்கங்களில் குறிப்பிட்ட பரப்பளவில் சிங்கம், புலி போன்ற விலங்குகள் அதற்கான இடத்தில் விடப்பட்டு இருக்கும். சற்று தொலைவில் இருந்து நாம் பார்க்கும் வகையில் அனுமதி அளிக்கப்பட்டு இருக்கும். இதற்கு இடையில் பல அடுக்கு கம்பி வேலிகள் போடப்பட்டு பதுகாப்பும் இருக்கும். கூண்டுகளில் விலங்குகள் அடைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்படுவது சில நாடுகளில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி வன விலங்குகளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் அடைத்து வைத்து அதை பார்ப்பதை விட விலங்குகளை சுதந்திரமாக உலவ விட்டு மனிதர்களை ஒரு கூண்டுக்குள் வைத்து அடைத்து விட்டால் எப்படி இருக்கும்... கேட்பதற்கே திகிலூட்டும் வகையில் இருக்கும் இந்த வசதி சீனாவில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் உள்ளது.

திகிலூட்டும் வகையில்...
சீனாவின் சோங்கிங் நகரில் உள்ள லேஹே லெடு வனவிலங்கு உயிரியல் பூங்காவில் சிங்கம் , புலி உள்ளிட்ட ஆபத்தான விலங்குகளும் சுதந்திரமாக உலவிக்கொண்டு இருக்கின்றன. அங்கு நான்குபுறமும் அடைக்கப்பட்ட ஒரு கூண்டில் சுற்றுலாப்பயணிகள் கொண்டு விடப்படுகின்றனர். இந்தக் கூண்டுகளை நோக்கி விலங்குகளை வரவப்பதற்காக, சுற்றுலாப்பயணிகள் அடைக்கப்பட்டு இருக்கும் கூண்டுகளை கொண்டு வரும் டிரக்கில் இறைச்சி துண்டுகள் கட்டி தொங்க விடப்படுகின்றன. இதைப்பார்க்கும் விலங்குகள் இறைச்சி துண்டுகளை கவ்வுவதற்காக ஓடி வந்து இந்தக் கூண்டுகளை சுற்றி மொய்க்கின்றன. சில விலங்குகளோ ஒய்யாரமாக மேலே படுத்து கிடக்கின்றன. சுற்றுலாப்பயணிகளுக்கு திகிலூட்டும் வகையில் இந்த அனுபவம் அமைகிறது.

இது மனித ஜூ...
இது தொடர்பான வீடியோ ட்விட்டரில் வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கடந்து டிரண்ட் ஹிட் அடித்து வருகிறது. நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களை வாரி இறைத்து வருகின்றனர். இந்த பதிவை வெளியிட்ட தன்சு யெகன் என்பவர் கேப்ஷன் ஒன்றையும் அதோடு போட்டுள்ளார். அந்த கேப்சனும் அனைவரையும் கவரும் விதத்தில் உள்ளது. அவர் வெளியிட்ட கேப்ஷனில், "இது மனித ஜூ... இங்கு ஆபத்தான மனிதர்களை கூண்டுகளில் விலங்குகள் காண முடியும்" என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவை ஆமோதித்து பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

நெட்டிசன்கள் கருத்து
நெட்டிசன்கள் சிலர் கூறுகையில் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட உயிரியல் பூங்காக்களில் மட்டுமே இது சாத்தியம் என்று தெரிவித்துள்ளனர். இன்னொரு நெட்டிசன் கூறுகையில், இதில் விஷேசமாக எதுவும் இல்லை. பெரிய பரந்த திறந்த வெளி கூண்டுகளில் விலங்குகள் அடைக்கப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளர்.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications