ஆப்கானிஸ்தானில் மர்ம நபர் சரமாரி துப்பாக்கிச்சூடு... பொதுமக்கள் 13 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
காபூல் : ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பொதுமக்கள் பலியாகினர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 14 ஆண்டுகளாக அரசு படைகளுக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. தற்போது, தலிபான் தீவிரவாதிகள் நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் தாக்கி வருகிறார்கள்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் அமைதியான மாகாணங்களில் ஒன்றான பல்க் மாகாணத்தில் உள்ள சரே பகுதியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 அப்பாவி மக்கள் பலியாகினர்.
இந்த துப்பாக்கிச்சூடு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த இடம் உஸ்பெகிஸ்தான் எல்லைக்கு அருகாமையில் அமைந்திருக்கும் பகுதியாகும்.
இந்த தாக்குதல் ஆப்கானிஸ்தான் பொதுமக்களிடடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications