500 ஹஜ் யாத்ரீகர்களிடம் ரூ2.5 கோடி மோசடி செய்த இந்தியருக்கு சவூதி போலீசார் வலை
ஜெட்டா: உணவு மற்றும் இருப்பிட வசதி செய்து தருவதாக ஹஜ் பயணிகளிடம் இரண்டரை கோடி ரூபாய் வரை ஏமாற்றிப் பணம் பறித்த இந்தியரை சவுதி போலீசார் தேடி வருகின்றனர்.
இசுலாமியர்களின் முக்கியக் கடமைகளுள் ஒன்று சவுதி அரேபியாவில் உள்ள மக்கா மற்றும் மதீனா நகரங்களுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்வது. அவ்வாறு ஹஜ் யாத்திரை மேற்கொண்ட யாத்ரீகர்களுக்கு மினா நகரில் தங்கும் கூடாரங்கள் அமைத்து தருவதாகவும், இலவச உணவு ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறி இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் ஏமாற்றி பணம் பறித்தது அம்பலமாகி யுள்ளது.
அந்நபர் கிட்டத்தட்ட 500 பயணிகளிடம் சுமார் 15 லட்சம் ரியால் பணம் இவ்வாறு ஏமாற்றிப் பறித்துள்ளார். அது இந்திய மதிப்பில் சுமார் இரண்டரை கோடி ரூபாய் ஆகும். ஏமாற்றப் பட்டவர்கள் ஜெட்டா போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் குற்றவாளியைத் தேடி வருகின்றனர். பணத்தை ஏமாற்றிய நபர் தற்போது செல்போனை அணைத்து வைத்து விட்டு தலைமறைவாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.
மோசடி பேர்வழியை நம்பி பணம் கட்டிய யாத்ரீகர்கள் ஹஜ் பயணத்தின் போது தங்குவதற்கும், உண்பதற்கும் மிகவும் சிரமப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பாக இந்திய தூதரகத்திலும் புகார் அளித்துள்ள போலீசார், 'ஹஜ் பயணிகளிடம் மோசடி செய்த ஆசாமி மக்காவுக்கும் ஜெட்டாவுக்கும் இடையே எங்காவது பதுங்கி இருப்பான். எங்கள் பார்வையில் இருந்து தப்பி அவன் சவுதியை விட்டு வெளியேற முடியாது' எனத் தெரிவித்துள்ளனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications