ஈரானில் உள்ள இந்தியர்களே உஷார்! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இதை செய்யாதீங்க!
தெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் மிகப்பெரிய தாக்குதலை நடத்தலாம் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது. இந்நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு, இந்திய தூதரகம் அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது.
ஈரானில் உள்ள இந்தியக் குடிமக்களை 48 மணி நேரத்திற்கு வீட்டிலேயே இருக்குமாறு இந்தியத் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. ஈரானில் உள்ள இந்தியக் குடிமக்கள் அடுத்த 48 மணி நேரத்திற்கு வீட்டிலேயே இருக்குமாறு தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

இன்று மாலை வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், குடிமக்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என்றும், அனைத்து மின்சார மற்றும் இராணுவத் தளங்களைத் தவிர்க்கவும், பல மாடிக் கட்டிடங்களின் மேல் தளங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், நெடுஞ்சாலைப் பயணம் மேற்கொள்ளும்போது, செல்லும்பாதை குறித்து தூதரகம் வெளியிட்டிருக்கும் அப்டேட்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது.
தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹோட்டல்களில் தங்கியிருப்பவர்கள் அங்கேயே இருக்குமாறும், அங்குள்ள தூதரகக் குழுவினருடன் தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஏதேனும் உதவி தேவைப்படின், இந்தியர்கள் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:
மொபைல் எண்கள்: +989128109115, +989128109109, +989128109102, +989932179359
மின்னஞ்சல்: [email protected]
அமெரிக்காவின் மிரட்டல்
போர் நிறுத்தம் குறித்து, அமெரிக்கா முன் வைத்திருக்கும் வலியுறுத்தல்களை ஈரான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் கேட்டிருக்கிறார். ஒருவேளை ஈரான் இதை ஏற்கவில்லை எனில், முழு போர் தொடங்கப்படும் என்றும் டிரம்ப் கூறியிருக்கிறார். இதற்காக அவர் விடுத்திருந்த காலக்கெடு நாளை அதிகாலை 5.30 மணியுடன் நிறைவடைகிறது. எனவே ஈரானில் உள்ள இந்தியர்கள் குறித்து, இந்திய தூதரகம் அறிவுறுத்தல்களை கொடுத்திருக்கிறது.
-
ஈரானுக்கு அமெரிக்கா இறுதி வார்னிங்.. 1973, 1979, 2022-ஐ விட உலகில் மோசமான நிலை வரலாம் -
8 மணி கெடு! ஈரான் கையில் தான் எல்லாமே.. கடைசி நேரத்தில் கைவிரித்த ஜேடி வேன்ஸ்.. டிரம்ப் ஆட்டம்! -
இதுதான் எங்க கண்டிஷன்.. டிரம்ப்-க்கு செக் வைத்த ஈரான்.. போரில் புதிய திருப்பம்! -
"ஒரு நிமிடம் 2 டிரோன்கள்.." அமெரிக்க உளவு துறை அலுவலகத்தை காலி செய்த ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானை பார்த்து நடுங்கிய டிரம்ப்.. 2 சொந்த போர் விமானத்தையும் சுட்டு வீழ்த்திய அமெரிக்கா.. என்ன நடந்தது? -
அமெரிக்காவின் மூவ்.. லாக்டவுனில் சிக்கப்போகும் இந்தியா.. இன்னைக்கு நைட்டு விஷயம் தெரிஞ்சிடும்! -
LIVE: இன்று இரவு மொத்த ஈரானும் காலியாகப்போகுது.. டிரம்ப் வார்னிங்! வெடிக்கும் 3ம் உலகப்போர்! -
ஸ்மார்ட்போன் சந்தையில் ருத்ர தாண்டவம்.. ஈரான் போர் + AI சிப்.. 40% விலை உயர்வால் ஆடிப்போன மக்கள்..! -
டிரம்ப் நிர்வாகத்தில் கருப்பு ஆடு.. விமானி குறித்த விஷயத்தை லீக் செய்த நபருக்கு பகிரங்க வார்னிங் -
அமெரிக்க கடற்படையின் ‘புதிய வேட்டைக்காரன்’.. அணு ஆயுதத்தோடு களமிறங்கும் USS நியூ ஜெர்சி.. ஏன்? -
ஈரான் போரால் பாகிஸ்தானுக்கு பேரிடி.. இப்படி நடக்கும்னு எதிர்பார்த்து இருக்கவே மாட்டாங்கே.. போச்சே -
விடிய விடிய தேடுதல்.. ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஜெட் விமானத்தின் பைலைட் மீட்பு! அமெரிக்கா நிம்மதி









Click it and Unblock the Notifications