ஈரானில் உள்ள இந்தியர்களே உஷார்! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இதை செய்யாதீங்க!
தெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் மிகப்பெரிய தாக்குதலை நடத்தலாம் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது. இந்நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு, இந்திய தூதரகம் அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது.
ஈரானில் உள்ள இந்தியக் குடிமக்களை 48 மணி நேரத்திற்கு வீட்டிலேயே இருக்குமாறு இந்தியத் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. ஈரானில் உள்ள இந்தியக் குடிமக்கள் அடுத்த 48 மணி நேரத்திற்கு வீட்டிலேயே இருக்குமாறு தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

இன்று மாலை வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், குடிமக்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என்றும், அனைத்து மின்சார மற்றும் இராணுவத் தளங்களைத் தவிர்க்கவும், பல மாடிக் கட்டிடங்களின் மேல் தளங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், நெடுஞ்சாலைப் பயணம் மேற்கொள்ளும்போது, செல்லும்பாதை குறித்து தூதரகம் வெளியிட்டிருக்கும் அப்டேட்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது.
தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹோட்டல்களில் தங்கியிருப்பவர்கள் அங்கேயே இருக்குமாறும், அங்குள்ள தூதரகக் குழுவினருடன் தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஏதேனும் உதவி தேவைப்படின், இந்தியர்கள் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:
மொபைல் எண்கள்: +989128109115, +989128109109, +989128109102, +989932179359
மின்னஞ்சல்: [email protected]
அமெரிக்காவின் மிரட்டல்
போர் நிறுத்தம் குறித்து, அமெரிக்கா முன் வைத்திருக்கும் வலியுறுத்தல்களை ஈரான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் கேட்டிருக்கிறார். ஒருவேளை ஈரான் இதை ஏற்கவில்லை எனில், முழு போர் தொடங்கப்படும் என்றும் டிரம்ப் கூறியிருக்கிறார். இதற்காக அவர் விடுத்திருந்த காலக்கெடு நாளை அதிகாலை 5.30 மணியுடன் நிறைவடைகிறது. எனவே ஈரானில் உள்ள இந்தியர்கள் குறித்து, இந்திய தூதரகம் அறிவுறுத்தல்களை கொடுத்திருக்கிறது.
-
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications