வெடித்த ராணுவ புரட்சி.. அதிகரிக்கும் பதற்றம்! நைஜர் நாட்டு இந்தியர்களுக்கு மேஜர் ‛அட்வைஸ்’
நியாமே: நைஜர் நாட்டில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில் மக்களாட்சி வீழ்த்தப்பட்டுள்ளது. அங்குள்ள விமான நிலையங்கள் மூட வாய்ப்பு உள்ளதால் தேவையின்றி அங்கிருக்கும் இந்தியர்கள் சீக்கிரமாக வெளியேற வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக நைஜர் உள்ளது. இந்த நாட்டின் அதிபராக முகமது பாசும் உள்ளார். இந்நிலையில் தான் சில மாதங்களாக அங்கு ராணுவ புரட்சி ஏற்படலாம் என்ற சூழல் நிலவி வந்தது.
அதாவது அதிபர் முகமது பாசுக்கு எதிராக ராணுவம் திரண்டு கிளர்ச்சி செய்யலாம் என்ற தகவல்கள் பரவின. இதனால் அந்த நாட்டில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதற்கிடையே தான் கடந்த மாதம் இறுதியில் நைஜர் நாட்டில் ராணுவ புரட்சி ஏற்பட்டது. அந்நாட்டு ராணுவம் திடீரென ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையில் ஏற்பட்டது. மேலும் அதிபர் முகமது பாசுமை அந்தநாட்டு ராணுவம் அதிரடியாக கைது செய்தது. அதிபர் கைது செய்யப்பட்டு இருப்பதன் மூலம் அந்த நாடு தற்போது ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
நைஜர் நாட்டு ராணுவத்தின் இந்த செயலுக்கு ஐநா, ஆப்பிரிக்கா ஒன்றியம் உள்பட பல்வேறு உலக அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தான் நைஜர் நாட்டில் இருக்கும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முக்கிய அட்வைஸ் வழங்கி உள்ளது. இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:

நைஜர் நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் தேவையின்றி அங்கிருக்கும் இந்தியவர்கள் விரைவில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். நாட்டை விட்டு வெளியேறும்போது மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும். அங்கு நிலைமை மோசமாக உள்ளது. இதனால் நைஜர் நாட்டுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளவர்கள் அதனை ஒத்திவைக்க வேண்டும். நிலைமை சீரான பிறகு அங்கு பயணம் செய்வது சிறந்த முடிவாக இருக்கும்.
நைஜர் நாடு என்பது பிற ஆப்பிரிக்க நாடுகளை போலவே பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. மேற்கு, மத்திய ஆப்பிரிக்காவில் பல நாடுகளில் தற்போது ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கை அரங்கேறியுள்ளது. அதாவது கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் நைஜர் நாட்டுடன் சேர்ந்து மொத்தம் 7 இடங்களில் ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications