எட்டு கால் பூச்சியைப் பார்த்து 9 வயது மகனை காரிலேயே விட்டுவிட்டு பயந்து ஓடிய பெண்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் காரில் எட்டுக் கால் பூச்சி இருந்த காரணத்தினால் 9 வயது மகனை காரிலேயே விட்டுவிட்டு பெண் ஒருவர் ஓடிய சம்பவம் கலகலப்பினையும், பரபரப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏஞ்சலா கிப் தனது ஒன்பது வயது மகனுடன் அமெரிக்காவின் வட இந்தியானா மாநிலத்தில் உள்ள சைராக்யூஸ் நகரத்தில் காரில் பயணித்துக் கொண்டிருந்தார்.

Indiana Mom Jumps From Moving Car After Seeing Spider, Causing Wreck and Injuring 9-Year-Old Son

உணவு இடைவெளிக்காக நிறுத்தியிருந்த காரை ரிவர்ஸ் கியரில் இயக்கி கிளம்பத் தயாரானார். அப்போது தனது தோள் மீது ஏதோ ஏறுவதை உணர்ந்த ஏஞ்சலா திடுக்கிட்டார்.

அலறியடித்த ஏஞ்சலா:

தோளில் ஏறிய எட்டுக்கால் பூச்சியப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் மகன் காரில் இருப்பதையும் மறந்து, அலறியடித்தபடி காரிலிருந்து சட்டென எகிறி வெளியில் குதித்தார்.

பள்ளி வாகனம் மீது மோதிய கார்:

பின்நோக்கி சென்று கொண்டிருந்த காரில் இருந்த அவரது மகன் அருகிலிருந்த பள்ளி வாகனத்தின் மீது கார் மோதப்போவதை உணர்ந்து அவசரமாக காரை நிறுத்தும் முயற்சியில் பிரேக் போட முற்பட்டபோது தவறுதலாக ஆக்ஸிலேட்டரை அழுத்திவிட முன்பைவிட அதிக வேகம் பிடித்த கார் அந்தப் பள்ளி வாகனத்தின் மீது மோதியே விட்டது.

தலையில் சிறிய காயம்:

மோதிய வேகத்தில் காரின் பின்பகுதி அப்பளமாக நசுங்கியது. நல்ல வேளையாக அந்தப் பள்ளி வாகனத்தில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் உண்டாகவில்லை. ஏஞ்சலாவின் மகனுக்கு மட்டும் தலையில் சிறிய காயம் ஏற்பட்டது.

பயத்தால் தண்டனை இல்லை:

பொதுவாக அமெரிக்காவில் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும்படி நடந்துகொள்ளும் பெற்றோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். ஆனால், ஏஞ்சாலா விவாகாரத்தைப் பொறுத்தவரை அவரே பயந்துபோய் இப்படி செய்தார் என்பதால் தண்டனைகள் ஏதும் இல்லை என அப்பகுதி போலீசார் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+