Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“இந்தியா எங்கள் நண்பன்”.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களை அனுமதிக்கும் ஈரான்! ஸ்பெஷல் பவர்!

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: கடும் மோதல்களுக்கு மத்தியில், 'ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பான வழித்தடம் வழங்கப்படும்' என்று இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபத்தாலி உறுதி அளித்துள்ளார்.

அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பது உட்பட பல்வேறு காரணங்களை முன்வைத்து ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகின்றன. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இருதரப்புக்கும் இடையில் சமரசம் ஏற்படவில்லை.

Iran Assures Safe Passage for India-Bound Ships Through Strait of Hormuz

ஈரான் கடல் பகுதியை ஒட்டியுள்ள ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடப்பதால், பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த வழியாகவே கச்சா எண்ணெய் வருவதால், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக இந்தியாவில் எல்பிஜி கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அரபிக் கடலில் பெர்​சி​யன் வளை​கு​டாவை​யும் ஓமன் வளைகுடாவை​யும் ஹார்​முஸ் ஜலசந்தி இணைக்​கிறது. இது 167 கி.மீ நீளம், 50 கி.மீ அகலம் கொண்​ட​து. இந்த ஜலசந்​தி​யின் குறிப்​பிட்ட சில பகு​தி​களில் 33 கி.மீ. அகலம் மட்​டுமே உள்​ளது. அதி​லும் கடல் ஆழமாக உள்ள 3 கி.மீ. அகலம் கொண்ட பகுதி வழியாகவே சரக்கு கப்​பல் போக்​கு​வரத்து நடை​பெறுகிறது. இது ஈரான் கடல் எல்​லையை ஒட்டி அமைந்​துள்ளது.

தற்​போது அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் ராணுவம் இடையி​லான போர் தீவிரமடைந்து வரும் நிலை​யில் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் சரக்கு கப்​பல் போக்​குவரத்தை ஈரான் ராணுவம் முழு​மை​யாக முடக்கி உள்​ளது. இதன் ​காரண​மாக இந்தியா உட்பட உலகம் முழு​வதும் எல்​பிஜி, சிஎன்​ஜி, கச்சா எண்ணெய்க்கு கடும் தட்​டுப்​பாடு ஏற்பட்டுள்​ளது.

ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் சுதந்​திர​மான சரக்கு கப்​பல் போக்​கு​வரத்தை உறுதி செய்ய அமெரிக்கா மற்​றும் பல்​வேறு ஐரோப்​பிய நாடு​கள் தீவிர முயற்​சியை மேற்​கொண்டு வரு​கின்​றன. இதற்​காக அப்​பகு​தி​யில் அமெரிக்க போர்க்​ கப்​பல்​கள் குவிக்​கப்​பட்டு உள்ளன. ஈரான் கடற்​படை​யின் 60 கப்​பல்​கள், ஏராள​மான படகுகளை அமெரிக்க ராணுவம் குண்​டு​களை வீசி அழித்து உள்ளது.

இந்த சூழலில் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் நூற்​றுக்​கணக்​கான கண்ணிவெடிகளை ஈரான் ராணுவம் வீசி​ உள்ளது. கடலுக்கு அடி​யில் மூழ்​கி​யிருக்​கும் இந்த கண்​ணிவெடிகளை ரிமோட் கண்ட்​ரோல் மூலம் இயக்க முடி​யும். எதிரி​களின் போர்க்​கப்பல்கள், சரக்கு கப்பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் வரும்​போது கண்ணி வெடிகளை வெடிக்​கச் செய்து கப்​பல்​களை தகர்ப்​போம் என்று ஈரான் எச்​சரித்​துள்​ளது.

மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்சர் ஜெய்​சங்​கர், ஈரான் வெளி​யுறவு அமைச்சர் அப்​பாஸ் அரக்ச்​சி​யுடன் தொலைபேசி வாயிலாக தீவிர ஆலோ​சனை நடத்தினார். அப்போது இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையின் அத்தியாவசியத்தை ஜெய்சங்கர் எடுத்துரைத்தார். இரு நாடுகளுக்கும் உள்ள நீண்ட கால உறவு மேம்பட இந்திய கப்பல்களுக்கு வழிவிட வேண்டும் என்று அப்பாஸ் அரக்ச்சியை ஜெய்சங்கர் கேட்டுக் கொண்டார்.

இந்​தி​யா​வின் கச்சா எண்​ணெய் மற்​றும் எல்பிஜி தேவை​யில் 80 சதவீதத்​துக்​கும் மேலாக இறக்​குமதியைச் சார்ந்தே உள்​ளது. இந்த வழித்​தடத்​தில் பாதிப்பு ஏற்​பட்​டால் இந்​தி​யப் பொருளா​தா​ரம் கடுமையாகப் பாதிக்​கப்​படும் என எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்​தி​யக் கப்​பல்​களுக்கு விலக்கு அளிக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக, இந்தியக் கப்பல்களைப் பாதுகாப்பாகக் கடந்து செல்ல ஈரான் அனுமதிக்குமா என்ற கேள்விக்குப் பதிலளித்த இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபத்தாலி, "ஆமாம்.. ஏனெனில் இந்தியாவும் நாங்களும் நண்பர்கள். இதை நீங்கள் சிறிது நேரத்தில் பார்ப்பீர்கள். ஏனெனில், ஈரானும் இந்தியாவும் நட்பு நாடுகள் என்று நாங்கள் நம்புகிறோம். எங்களுக்குப் பொதுவான நலன்களும், பொதுவான எதிர்காலமும் உள்ளன.

இந்திய மக்களின் துன்பம் எங்கள் துன்பமே. அதுபோலவே எங்கள் துன்பமும் இந்திய மக்களின் துன்பம். இந்தக் காரணத்தினால், இந்திய அரசு எங்களுக்கு உதவுகிறது; நாங்களும் இந்திய அரசாங்கத்துக்கு உதவ வேண்டும். இந்தியாவில் உள்ள தூதர்களாகிய நாங்கள், இந்தப் பிராந்தியத்தில் எங்களுக்குப் பொதுவான எதிர்காலம் இருப்பதாக நம்புகிறோம். இந்தக் காரணத்தினால், ஈரானின் அனைத்து உயர்மட்ட அதிகாரிகளும், இந்திய அரசாங்கத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்து வழிவகை செய்யுமாறு இந்தியாவில் உள்ள ஈரானியத் தூதரகத்துக்கு அறிவுறுத்தியுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள ஈரானின் உச்சத் தலைவரின் பிரதிநிதியான அப்துல் மஜித் ஹக்கீம் இலாஹி, ஹார்முஸ் நீரிணையை மூடிவிட வேண்டும் என்று தங்கள் நாடு ஒருபோதும் விரும்பியதில்லை என்றும், சில கப்பல்கள் இப்போதும் அந்த வழியாகச் சென்று கொண்டிருக்கின்றன என்றும் கூறியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+