ஈராக்: 190 பிணைக் கைதிகளை சுட்டுக் கொன்றனர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்?

Subscribe to Oneindia Tamil

பாக்தாத்: ஈராக்கில் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட 190 பேரை சதாம் ஆதரவுப் படையான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Iraq Crisis: ISIS executed 160 captives, says Human rights watch

ஈராக்கில் ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு உள்நாட்டுப் போரை நடத்தி வருகிறது. முன்னாள் அதிபர் சதாம் உசேனின் ஆதரவாளர்களைக் கொண்ட இந்த ஐ.எஸ்.ஐ.எஸ்., ஈராக்கின் பல நகரங்களைக் கைப்பற்றியிருக்கிறது.

மேலும் பிணைக் கைதிகளாக சிக்கிய நூற்றுக்கணக்கானோரை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு சுட்டுக் கொன்று வருவதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் 190 பிணைக் கைதிகளை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்ற அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

கடந்த 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை திக்ரிக் நகரின் இருவேறு இடங்களில் சுமார் 160 முதல் 190 பேரை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் சுட்டுக் கொன்றதாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+