அமெரிக்கா + இஸ்ரேல் + இந்தியா.. ஒன்றான 3 நாடுகள்! பாகிஸ்தானின் அணு மையங்கள் மீது தாக்குதல்? பின்னணி
இஸ்லாமாபாத்: இந்தியா, அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் இணைந்து பாகிஸ்தானின் அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இது பாகிஸ்தானை அதிர வைத்துள்ளது. இந்நிலையில் தான் அதுபற்றி இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர்அப்துல் பாசித் முக்கிய விளக்கத்தை கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் மொத்தம் 9 நாடுகளிடம் மட்டுமே அணுஆயுதம் என்பது உள்ளது. அதன்படி அமெரிக்கா, ரஷ்யா, சீனா, வடகொரியா, பிரிட்டன், பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிடம் மட்டுமே உள்ளது. பிற நாடுகளிடம் அணுஆயுதம் என்பது இல்லை.

இதில் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுடனான மோதல் காரணமாக இப்போது ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. ஈரானின் இந்த திட்டத்தை முடக்க அமெரிக்கா முயன்று வருகிறது.
அணுசக்தி திட்டம் என்ற பெயரில் ஈரான் அணுஆயுதம் தயாரிக்காமல் தடுக்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய ஈரானுக்கு டொனால்ட் டிரம்ப் கடிதம் எழுதியுள்ளார். இதற்கு இன்னும் ஈரான் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அமெரிக்கா - ஈரான் இடையே பதற்றம் என்பது அதிகரித்துள்ளது. ஈரான், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யாவிட்டால் அந்த நாடு மீது இதுவரை இல்லாத அளவுக்கு வெடிகுண்டுகள் வீசப்படும் என்று டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஆனால் ஈரான் இன்னும் அமெரிக்காவுடன் டீல் செய்ய விரும்பவில்லை.
இப்படியான சூழலில் தான் தற்போது பாகிஸ்தானுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் அப்துல் பாசித் முக்கிய தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதாவது பாகிஸ்தானிடம் அணுஆயுதம் உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே காஷ்மீர் விவகாரத்தில் பிரச்சனை உள்ளது. இப்படியான சூழலில் இந்தியா, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் சேர்ந்து பாகிஸ்தானின் அணுசக்தி திட்டங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த வியூகம் வகுத்துள்ளதாக அப்துல் பாசித் தெரிவித்து பரபரப்பை கிளப்பி உள்ளார்.
இதுதொடர்பாக அப்துல் பாசித், அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் 2 வது முறையாக பதவியேற்றுள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுடன் சேர்ந்து இந்தியா பாகிஸ்தானின் அணுசக்தி திட்டங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுபற்றி அப்துல் பாசித்திடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அப்துல் பாசித், ‛'டொனால்ட் டிரம்ப் இப்போது பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தை அழிப்பார் என்று பல வதந்திகள் உள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் பாகிஸ்தானிடம் அணு குண்டுகள் இருப்பதை விரும்பவில்லை என்பது உண்மைதான். இஸ்லாமிய நாடுகளில் பாகிஸ்தான் மட்டுமே அணுஆயுதம் வைத்துள்ள நாடாக உள்ளது. இது பலருக்கும் கவலையை ஏற்படுத்துகிறது.
ஆனாலும் பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது. அணுகுண்டுகளை அழிக்க வாய்ப்பில்லை. மீறி எங்களை சீண்டினால் உலகில் உள்ள எந்த நாடுகளுக்கும் உரிய பதிலடி கொடுக்கும் வகையில் அணுஆயுத ஏவுகணைகள் உள்பட பிற அணுஆயுதங்கள் பாகிஸ்தானிடம் உள்ளது'' என்றார்.
-
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியாவுக்கு சிக்கல் தொடரும்.. ஹார்முஸ் திறக்கப்பட்டாலும் கூட எல்லா பிரச்சனையும் உடனே தீராது! -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
யுரேனியத்தை பதுக்கும் ஈரான்.. அமெரிக்கா தொட கூட முடியாது! டிரம்புக்கு செக்! -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications