Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சவூதியில் நடந்த இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் உயர்மட்ட நிர்வாக குழு கூட்டம்

Subscribe to Oneindia Tamil

தம்மாம்: கடந்த மாதம் 25ம் தேதி இந்தியன் சோஷியல் ஃபோரமின் தம்மாம் கிளை துவங்கப்பட்டது. இந்நிலையில் ஃபோரமின் உயர்மட்ட நிர்வாக குழு கூட்டம் கடந்த 30ம் தேதி நடைபெற்றது.

கடந்த 25.05.14 அன்று மாலை தம்மாம் அல்-கய்யாம் ரெஸ்டாரண்டில் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் தம்மாம் கிளையை இபுராஹீம் பாதுஷா திருமறை வசனம் ஓதி துவக்கி வைத்தார்.

கடையநல்லூர் சைபுல்லாஹ் இந்தியன் சோஷியல் ஃபோரம் பற்றிய அறிமுக உரை நிகழ்த்தினார். இந்திய அரசியல் அமைப்பு சட்டமும், ஜனநாயகமும் என்ற தலைப்பில் இந்தியன் சோஷியல் ஃபோரமின் கிழக்கு மாகாண தலைவர் மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி சிறப்புரையாற்றினார்.

காயல் அபுபக்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நரிப்பையூர் குதுபுதீன் நன்றியுரையுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது. முன்னதாக தம்மாம் கிளையின் புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

உயர்மட்ட நிர்வாக குழு கூட்டம்!

இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் (ISF) கிழக்கு மாகாண தமிழ் பிரிவின் உயர்மட்ட நிர்வாக குழு கூட்டம் 30.05.2014 அன்று வெள்ளிக்கிழமை மாலை தலைமை நிலையத்தில் தலைவர் மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி தலைமையில் நடைபெற்றது.

பொதுசெயலாளர் திப்பு சுல்தான் தீர்மானங்கள் குறித்து விளக்கமளித்தார்.

தலைமையின் வழிகாட்டலுக்கு இணங்க அல்கோபர், அல்-ஜுபைல், தம்மாம், அல்ஹஸ்ஸா போன்ற ஊர்களில் கிளை துவக்கி நூற்றுக்கணக்கான உறுப்பினர்களை இணைத்துள்ள அனைத்து பகுதி பொறுப்பாளர்களைும் பாராட்டப்பட்டனர்.

வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய சுதந்திர தின விழாவை அனைத்து கிளைகளிலும் எழுச்சியுடன் நடத்து, தற்போதைய இந்திய அரசியல் சூழல் குறித்தும், ஆட்சியாளர்களுடைய சிறுபான்மை மக்களின் மீதான அணுகுமுறை குறித்து சவூதி அரேபியாவில் செயல்பட்டு வரும் அனைத்து இந்திய முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் அல்ஹஸ்ஸா நிர்வாகிகள் அதிரை ரியாஸ், சலீம், தம்மாம் நிர்வாகிகள் காயல் செய்யது முஹம்மது, நரிப்பையூர் குதுபுதீன், அல்-ஜுபைல் நிர்வாகி அதிரை ஹஸன் அஹமது, அல்கோபர் நிர்வாகிகள் ராஜகிரி ஹாஜா முகைதீன், நெல்லை ஏர்வாடி ஷேக் முகைதீன், சிஹாத் நிர்வாகி தக்கலை ஷமீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஃபோரமின் கிழக்கு மாகாண செயலாளர் நரிப்பையூர் சம்சுதீன் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+