இந்தியர்களுக்கு இஷ்திஷாதி பயிற்சி அளிக்கும் ஐஎஸ்: எதற்கு தெரியுமா?
பாரீஸ்: பாரீஸில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் இஷ்திஷாதி என்ற முறைப்படி பயிற்சி பெற்றவர்கள். இஷ்திஷாதி என்றால் சாகும் வரை போராட்டம் என்று அர்த்தம்.
பாரீஸில் நடந்த தாக்குதல்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். தாக்குதல்களை நடத்திய தீவிரவாதிகள் இஷ்திஷாதி என்ற முறைப்படி பயிற்சி பெற்றவர்கள். இஷ்திஷாதி என்றால் சாகும் வரை போராட்டம் என்று அர்த்தம். இஷ்திஷாதி என்ற வார்த்தையை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் இஷ்திஷாதி தாக்குதல் முறை லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் ஃபிதாயீன் முறையைப் போன்று உள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேரும் இந்தியர்களுக்கு தீவிரவாதிகள் இஷ்திஷாதி முறைப்படி தான் பயிற்சி அளித்து வருகிறார்கள். வெளிநாடுகளில் தாக்குதல் நடத்த தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மட்டுமே இஷ்திஷாதி முறைப்படி பயிற்சி அளிக்கப்படுகிறது. அதனால் இஷ்திஷாதி பற்றி இந்தியா கவலைப்பட வேண்டி உள்ளது.
பாரீஸில் தாக்குதல்கள் நடத்திய தீவிரவாதிகளுக்கும் இஷ்திஷாதி முறைப்படி பயிற்சி அளிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இம்முறைப்படி பயிற்சி அளிக்கப்படுபவர்களுக்கு வெடிகுண்டுகள் அடங்கிய கவசம், ஏகே 47 துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் அளிக்கப்படுகிறது. இஷ்திஷாதி தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகள் முதலில் கையெறி குண்டை பாதுகாப்பு படையினர் இருக்கும் திசை நோக்கி வீசுவார்கள். மக்கள் கூட்டத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவார்கள். அதன் பிறகு இறுதியில் தங்கள் உடலில் கட்டியுள்ள வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வார்கள்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கல்யாணைச் சேர்ந்த ஷாஹீன் தான்கி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்த நான்கு இந்திய வாலிபர்களில் ஒருவர். அவர் இஷ்திஷாதி முறைப்படி பயிற்சி பெற்றவர். அவருக்கு 4 மாதம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 26/11 அல்லது பாரீஸ் தாக்குதல் போன்று இந்தியாவில் தாக்குதல் நடத்தவே அவர்களுக்கு இஷ்திஷாதி முறைப்படி பயிற்சி அளிக்கப்படுவதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஷ்திஷாதி மற்றும் ஃபிதாயீன் முறைகள் ஒன்று தான் என்கிறார்கள் அதிகாரிகள். லஷ்கர் இ தொய்பா, தாலிபான் தீவிரவாதிகள் ஃபிதாயீன் என்று கூறும் முறையைத் தான் அல் கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இஷ்திஷாதி என்கிறார்கள்.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேரும் அனைத்து இந்தியர்களுக்கும் இஷ்திஷாதி முறைப்படி பயிற்சி அளிப்பது இல்லை. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே அந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. ஷாஹீனுடன் சேர்ந்து கல்யாணைச் சேர்ந்த ஆரீப் மஜீதுக்கும் அந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications