உலகை உலுக்கிய 127 பேர் படுகொலை- பாரீஸ் பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்றது ஐ.எஸ்.ஐ.எஸ்.!!

Subscribe to Oneindia Tamil

பாரீஸ்: 127 பேரை பலி கொண்ட பாரீஸ் பயங்கரவாத தாக்குதலுக்கு அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இயக்கம்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பல்வேறு இடங்களில் குழுக்களாகப் பிரிந்து தீவிரவாதிகள் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். இதில் 127 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

உலகை உலுக்கிய இத்தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள், சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிரான பிரான்ஸின் நடவடிக்கைக்கு பதிலடி இது என முழக்கங்களை எழுப்பியிருந்தனர்.

இதனிடையே இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளே காரணம் என பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே குற்றம்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகள் வெளியான சிறிது நேரத்திலேயே ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், பாரீஸ் தாக்குதலுக்கு அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்பதாக ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் தெரிவித்துள்ளது.

அந்த அதிகாரப்பூர்வ அறிக்கையில், பாரீஸ் நகரத்தின் மையப்பகுதியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகளை ஆயுதங்களுடனும் தற்கொலை பெல்ட்டுகளுடனும் தானியங்கி துப்பாக்கிகளுடனும் நாங்களே அனுப்பி வைத்தோம் என தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+