120 பூனைகளுக்கு மீன் வாங்குவதற்காக ஒரு கோடி திருடிய ஜப்பான் மனிதர் கைது
டோக்கியோ: தான் வளர்த்து வரும் 120 பூனைகளுக்கு உணவளிப்ப்பதற்காக, கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான பணம் மற்றும் நகைகளைத் திருடிய நபர் ஒருவரை ஜப்பான் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள இசுமி நகரைச் சேர்ந்தவர் 48 வயது மமோரு டெமிஸ் என்ற நபர். வருமானத்திற்கென வேலை எதையும் செய்யாத இந்நபர், வீட்டில், தெருவிலும் என மொத்தமாக கிட்டத்தட்ட 120 பூனைகளை செல்லப் பிராணிகளாக வளர்த்து வந்துள்ளார்.
பூனைகளை தனது நண்பர்களைப் போல் பாவித்து வளர்த்த டெமிஸ், அவற்றிற்கு உணவிடுவதற்காக இதுவரை 32 இடங்களில் கொள்ளையடித்துள்ளாராம். இதுவரை அவர் கொள்ளையிட்ட பொருட்களின் மதிப்பு, 185 ஆயிரம் அமெரிக்க டாலர் ஆகும். அதாவது, இந்திய மதிப்பில் ரூ ஒரு கோடியே 14 லட்சத்து, 83 ஆயிரத்து 320 ரூபாய் ஆகும்.
தற்போது, போலீசில் சிக்கியுள்ள இந்த பூனைப் பிரியன், ‘பூனையின் கன்னங்களோடு தனது கன்னத்தை உரசும் போது தான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்வதாக கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், திருடிய பணத்தைக் கொண்டு தனது பூனைகளுக்கு தினமும் புதிய மீன்கள், கோழிக்கரி மற்றும் சிலவகை உணவுகளை வாங்கிக் கொடுத்து வந்துள்ளான் டெமிஸ் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications