ஐ.நா. சபை முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மரணம்
Recommended Video
ஜெனீவா: ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் இன்று காலமானார். அவருக்கு வயது 80.
தனது மனிதாபிமான பணிகளுக்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் அன்னான். அன்னானின் மரணம் குறித்து அறிவித்துள்ள அவரது அறக்கட்டளை சனிக்கிழமையன்று கோபி அன்னான் மரணமடைந்தார். அவர் சிறிது காலமாக உடல் நலமற்றிருந்தார் என்று தெரிவித்துள்ளது.
1997 முதல் 2006 வரை ஐ.நா. பொதுச் செயலாளராக இருந்தவர் கோபி அன்னான். இந்தப் பதவியை வகித்த முதல் கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர் அன்னான்தான்.
அதன் பின்னர் சிரியாவுக்கான ஐ.நா. சிறப்புத் தூதராக கோபி அன்னான் பணியாற்றியுள்ளார். சிரியாவில் அமைதி திரும்பச் செய்வதற்காக கடுமையாக முயற்சி செய்தார்.
"Kofi Annan was a guiding force for good. It is with profound sadness that I learned of his passing." - @antonioguterres
— UN Geneva (@UNGeneva) August 18, 2018
Former @UN Secretary General and Nobel Peace Laureate Kofi Annan passed away on Saturday, 18 August. Statement: https://t.co/YkcMqTk0qI pic.twitter.com/DdYbVW6MT5
அன்னானின் பதவிக்காலத்தின்போதுதான் 2003ல் ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. சதாம் உசேன் சிறை பிடிக்கப்பட்டார். பின்னர் 2006ல் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டார்.