செல்பி வெறித்தனத்தின் உச்சகட்டம்.... தாயின் பிணத்தை தோண்டி எடுத்து செல்பி எடுத்த மகன்!
பெய்ரூட்: லெபனானில் புதைக்கப்பட்ட தனது தாயாரின் பிணத்தை தோண்டி எடுத்து, அதனுடன் சுடுகாட்டுக் காவலர் ஒருவர் செல்பி எடுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
எங்கு பார்த்தாலும் செல்பி பைத்தியக்காரத்தனம் அதிகரித்து விட்டது. யாரைப் பார்த்தாலும் செல்பி மோகம் பிடித்து அலைகிறார்கள். இது சில நேரங்களில் விபரீதமாகவும் போய் விடுகிறது. செல்பி எடுப்பது என்பது ஒரு உளவியல் பிரச்சினை என்று சமீபத்திய ஆய்வு ஒன்றும் கூறியுள்ளது. இந்த நிலையில் லெபனானில் ஒரு அதி பயங்கரமான செல்பி விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
லெபனானில் உள்ள சுடுகாடு ஒன்றில் காவலாளியாக பணி புரிந்து வருபவர் டெப் சாய்ஃலி. இவர் சமீபத்தில் தனது தாயாரின் பிணத்துடன் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது.

தாய் பிணத்துடன் செல்பி...
அதிலும், பல ஆண்டுகளுக்கு முன்னரே காலமான அவரது தாயாரின் பிணத்தை தோண்டி எடுத்து, அதனுடன் அவர் செல்பி எடுத்துள்ளார்.
இது தொடர்பாக அந்நாட்டு தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று அவரிடம் பேட்டி எடுத்தது. அந்த சந்திப்பில் மனநல மருத்துவர் ஒருவரும் பங்கேற்றார்.
அப்போது பேசிய டெப், தனக்கு அமெரிக்காவில் வரன் ஒன்று அமைந்ததாகவும், ஆனால், மரணங்கள் தனக்கு விருப்பமான ஒன்றாக இருப்பதால் அதனை தான் நிராகரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுவரை தான் நிறைய சடலங்களுடன் செல்பி எடுத்துக் கொண்டதாகவும், ஆனால், தாயாருடன் எடுத்துக் கொண்ட செல்பியை மட்டும் பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
மனநல பாதிப்பில்லை...
டெப்பின் இந்த பேட்டியைப் பார்த்து பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நிச்சயம் டெப்பிற்கு மனநல பாதிப்பு இருக்க வேண்டும் என அவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
ஆனால், டெப்பின் பேச்சு மற்றும் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது, அவருக்கு மனநல பாதிப்பு இருப்பதற்கான எந்தவித அறிகுறியும் தெரியவில்லை என இந்த பேட்டியில் கலந்து கொண்ட மருத்துவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஏன் இவ்வாறு டெப் சடலங்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறார் என்பது குறித்து அவர் தெளிவாக எதையும் குறிப்பிடவில்லை.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications