For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லண்டன் அடுக்குமாடி குடியிருப்பை விழுங்கிய தீ: பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு

By BBC News தமிழ்
|

லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ யில் பலர் உயிரிழந்திருப்பதாக லண்டன் தீயணைப்பு ஆணையர் டேனி காட்டன் தெரிவித்திருந்த நிலையில் , இதுவரை 12 பேர் பலியாகியிருப்பதா போலீசார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்து
BBC
தீ விபத்து

மேலும், இந்த தீ சம்பவத்தி்ல் காயமடைந்த 65-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக லண்டன் ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.

அந்த கட்டடத்தில் சுமார் 300 முதல் 500 பேர் வரை இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிகிச்சை பெறும் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் தவிர மீதமுள்ளவர்களில் எத்தனை பேர் தப்பித்தனர், எத்தனைபேர் அங்கு சிக்கியிருக்கலாம் அல்லது பலியாகியிருக்கக்கூடும் என்கிற விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

லண்டன் அடுக்கு மாடிக் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் உயிரிழப்பு
PA
லண்டன் அடுக்கு மாடிக் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் உயிரிழப்பு

இதோபோன்ற நிலையில் உள்ள மற்ற அடுக்குமாடிக் குடியிருப்புக்களில் சோதனை நடத்தப்படும் என காவல் துறை மற்றும் தீயணைப்புத்துறை அமைச்சர் நிக் ஹர்ட் தெரிவித்துள்ளார்.

தீயணைக்கும் பணி
PA
தீயணைக்கும் பணி

முன்னதாக, மேற்கு லண்டனில் அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்டடத்தில் தீப் பிடித்து, மக்கள் தங்கள் வீடுகளில் சிக்கிக் கொண்டிருப்பதாக அந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

லண்டனில் புதன்கிழமை அதிகாலை நேரத்தில் பெரிதாக பரவிய இந்தத் தீயை அணைக்க சுமார் 200 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மக்களை வெளியேற்றுவதற்கான வேலைகள் நடந்துவருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீ பிடித்த நேரத்தில், பல நூற்றுக்கணக்கானோர் அந்தக் கட்டடத்தில் இருந்ததாகவும், பெரும்பாலானோர் தூங்கிக் கொண்டிருந்ததாகவும் நம்பப்படுகிறது.

தீயணைக்கும் பணி
REUTERS/TOBY MELVILLE
தீயணைக்கும் பணி

எரிந்துகொண்டிருக்கும் கட்டடத்திலிருந்து எரிந்து-அணையும் ஒளியைக் கண்டதாகவும், அது ( கட்டடத்தில் சிக்கியவர்களின்) கைவிளக்கு (டார்ச்) வெளிச்சம் என்று நம்பியதாகவும், இக்குடியிருப்பு முழுவதுமாக பற்றி எரியும் நிலையில் இருப்பதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு அருகில்
AFP
சம்பவ இடத்துக்கு அருகில்

''நான் சாம்பலில் மூடப்பட்டு இருக்கிறேன், அந்த சம்பவம் அவ்வளவு மோசமாக உள்ளது,'' என்று சேனல் 4 டிவி நிகழ்ச்சியின் அமேசிங் ஸ்பேஸின் தொகுப்பாளர் ஜார்ஜ் கிளார்க், ரேடியோ5க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்கள்
PA
பாதிக்கப்பட்டவர்கள்

''நான் ஒரு 100 மீட்டர் தூரத்தில் உள்ளேன். நான் முழுவதுமாக சாம்பலால் மூடப்பட்டு உள்ளேன்,'' என்றார் அவர்.

முழுவதுமாக எரிந்து விட்ட கட்டிடம்
Reuters
முழுவதுமாக எரிந்து விட்ட கட்டிடம்

''அந்த கட்டடம் முழுவதுமாக எரிந்துள்ளது,'' என்று சம்பவத்தை நேரில் பார்த்த டிம் டௌனி என்ற மற்றொருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

தீயணைக்கும் பணி
PA
தீயணைக்கும் பணி

''அந்த கட்டடம் முற்றிலும் எரிந்துபோய்விட்டது,'' என்றார் அவர்.

''நான் இது போன்ற ஒரு சம்பவத்தை பார்த்ததில்லை. எத்தனை பெரிய சம்பவம். முழு கட்டடமும் நொறுங்கிப் போகிறது. கட்டடத்தில் இருந்து கரும்புகை வெளியாகிறது,'' என்றார் டௌனி.

தீயிலிருந்து காப்பாற்ற குழந்தையை ஜன்னல் வழியே வீசிய தாய்

லண்டன் தீ விபத்து (புகைப்படத் தொகுப்பு)

பிற செய்திகள்

ஏர் இந்தியா: உடல் 'குண்டானவர்கள்' பணிப்பெண் வேலையை இழக்கிறார்கள்

இதய நோயிலிருந்து தப்பித்து நீண்ட நாட்கள் உயிர் வாழ வேண்டுமா ?

இங்கிலாந்துக்கு அதிர்ச்சி; இறுதிப் போட்டியில் பாகிஸ்தான்

BBC Tamil
English summary
Twelve people have died in a west London tower block fire and the number of deaths is expected to rise, police have said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X