நேபாள அதிபர் பாதுகாப்பு வாகனங்கள் மீது இந்திய வம்சாவளி மாதேசிகள் தாக்குதல்...பெட்ரோல் குண்டு வீச்சு
காத்மாண்டு:நேபாள அதிபர் பித்தியா தேவி பண்டாரி, தரிசனத்துக்காக சென்ற கோவிலில் பெட்ரோல் குண்டுகளை வீசிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாதேசிகள் அவருடைய பாதுகாப்பு வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாதேசிகள் நேபாளத்தில் சிறுபான்மை இன மக்களாக உள்ளனர்.இவர்கள் விகிதாச்சார பிரநிதித்துவம் வழங்கக் கோரியும், மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத்தில் தங்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்றும், இது குறித்து அரசியல் சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,அந்நாட்டு அதிபர் பித்தியா தேவி பண்டாரி ஜனக்பூர் பகுதியில் உள்ள பிரசித்திபெற்ற கோவிலுக்கு இன்று தரிசனத்துக்காகச் சென்றார். அப்போது மாதேசி மோர்ச்சா இயக்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்பு கொடி காட்டினர்.
சிலர் திடீரென அவரது பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.அப்போது அவரது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினர் அவரை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அதனையடுத்து போலீசார் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைந்து போகச் செய்தனர். அப்போது, சிலர் அதிபர் சென்ற கோவிலில் பெட்ரோல் குண்டுகளை எரிந்தனர். இதில் எந்தவித காயமும் இன்றி அதிபர் பிந்தியா தேவி பாதுகாப்பாக மீட்டுச் செல்லப்பட்டார்.
இந்நிலையில், நாளை அங்கு தரிசனத்துக்காக செல்ல இருந்த நேபாளத்துக்கான இந்திய தூதர் ரஞ்சித் ரே தனது பயணத்தை ரத்து செய்தார்.












Click it and Unblock the Notifications