பெண் தீவிரவாதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் விடுவிக்க கோருவது ஏன்? 'திடுக்' தகவல்கள்!
அம்மான்: ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகள் சிறையில் இருக்கும் பெண் தீவிரவாதிகளை விடுவிக்க கோருவதே மனித வெடிகுண்டுகளாக மாற்றி அனுப்பத்தான் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தம் வசம் உள்ள ஜோர்டான் மற்றும் ஜப்பான் பிணைக் கைதிகளை விடுவிக்க ஜோர்டான் சிறையில் தூக்கு தண்டனை கைதியாக இருக்கும் ஐ.எஸ். பெண் தீவிரவாதி சஜித் அல்- ரிஷாவியை விடுவிக்க நிபந்தனை விதித்துள்ளனர்.

ஜோர்டானின் மாஷ்-அல்-கசாபே, ஜப்பானின் பத்திரிகையாளர் கெஞ்சிகோடோ ஆகியோர் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் பிணைக் கைதிகளாக உள்ளனர். பெண் தீவிரவாதியை 24 மணிநேரத்துக்குள் விடுதலை செய்யாவிட்டால் பிணைக் கைதிகள் இருவரையும் கொலை செய்துவிடுவதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
2005ஆம் ஆண்டு ஜோர்டானில் ரட்டிசன் ஹோட்ட்லில் தாக்குதல் நடத்துவதற்காக தற்கொலைப் படை தீவிரவாதியாக கணவருடன் சென்றவர்தான் சஜித் அல் ரிஷாவி. இருவரும் அல் கொய்தா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். இருப்பினும் ஹோட்டல் மீதான தாக்குதலின் போது சஜித்தின் கணவர் உடலில் கட்டப்பட்டிருந்த குண்டுகள் வெடித்தன.. சஜித்தின் உடலில் கட்டப்பட்ட குண்டுகல் வெடிக்கவில்லை. இதனால் அவர் வசமாக சிக்கிக் கொண்டார்.
பின்னர் ஜோர்டான் போலீசிடம் தானும் கணவரும் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த வந்ததை சஜித் ஒப்பும் கொண்டார். ஐ.எஸ். தீவிரவாதிகளால் 'சகோதரி' என்று அழைக்கப்படுகிறவர் சஜித். தற்போது ஐ.எஸ். இயக்கத்தினர் அனுப்பியுள்ள வீடியோ பதிவில் கூட சஜித்தைப் பற்றி பெருமிதமாக கூறியுள்ளனர் ஐ.எஸ். தீவிரவாதிகள்.
அதே நேரத்தில் அல்கொய்தா இயக்கத்தைச் சேர்ந்த சஜித் சிறையில் இருக்கிறார்.. அவர் எப்படி ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்தார் என்பதுதான் பெரும் கேள்வி. ஏனெனில் சஜித் கைது செய்யப்பட்டது 2005ஆம் ஆண்டு.. அப்போது ஐ.எஸ். இயக்கமே உருவாகவும் இல்லை.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் 2005ஆம் ஆண்டு அல் கொய்தா இயக்கத்தில் இணைந்திருந்த அபு முசாப் அல் ஜர்காவியின் சகோதரிதான் சஜித் எனத் தெரியவந்துள்ளது. அதன் பின்னர் பக்தாதி தலைமையிலான ஐ.எஸ். இயக்கத்தில் ஜர்கா இணைந்தான். இந்த அடிப்படையில்தான் சஜித்தை விடுவிக்க ஐ.எஸ். தீவிரவாதிகள் கோரிவருகின்றனர்.
சஜிதாவைப் பொறுத்தவரையில் தீவிரவாதிகளால் மறக்கப்பட்ட முகமாகிவிட்டார்.. ஜோர்டான் சிறையில் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருக்கிறார்.. அவர் எந்த நேரத்திலும் தூக்கிலிடப்படக் கூடும் என்ற நிலை இருக்கிறது. இதனால்தான் இரு பிணைக் கைதிகளை முன்வைத்து சஜிதாவை விடுதலை செய்யக் கோரி ஐ.எஸ். தீவிரவாதிகள் நிபந்தனை விதித்திருக்கின்றனர்.
ஐ.எஸ். தீவிரவாதிகளைப் பொறுத்தவரையில் இப்படி சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்யக் கோருவது என்பது அவர்களை மனித வெடிகுண்டுகளாக மாற்றுவதற்காகத்தான் எனக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் பத்திரிகையாளர் போலியை விடுதலை செய்யவும் இதேபோல் ஆபியா என்ற பெண் தீவிரவாதியை விடுவிக்க நிபந்தனை விதித்திருந்தனர் ஐ.எஸ். தீவிரவாதிகள்.
பெண் தீவிரவாதி ஆபியா டெக்ஸாஸில் 86 ஆண்டுகால சிறைத் தண்டனையை எதிர்கொண்டிருப்பவர். ஆனால் ஐ.எஸ். தீவிரவாதிகள் விதித்த நிபந்தனை ஏற்கப்படாததால் பத்திரிகையாளர் தலையைத் துண்டித்து உலகை அதிர வைத்தது ஐ.எஸ். தீவிரவாத கும்பல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications