ரத்தக்களறி.. ஒரே நாளில் 1,428 டால்பின்கள் கொன்று குவிப்பு.. செந்நிறமான தீவு.. வலுக்கும் எதிர்ப்பு
டென்மார்க்: ஒரேநாளில் 1,400க்கும் மேற்பட்ட டால்பின்கள் வேட்டையாடப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. டென்மார்க் ஃபாரோ தீவுகளில்தான் இப்படி ஒரு நிகழ்வு நடந்து பொதுமக்களுக்கு வியப்பை ஏற்படுத்தி வருகிறது.
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ளது ஃபேரோ என்ற தீவு.. இங்கு வருடா வருடம் பாரம்பரிய திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்..
கடந்த 4 நூற்றாண்டுகளுக்கும் மேலாகவே இந்த பாரம்பரிய திருவிழா நடந்து வருகிறது.. இதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருவார்கள்..

திருவிழா
அப்படித்தான், நேற்றைய தினம், ஃபேரோ தீவில் மக்கள் ஒன்றுகூடியுள்ளனர்.. அப்போது, திருவிழா கொண்டாட்டத்தின்போது 1,400-க்கும் மேற்பட்ட டால்பின்களை பிடித்து வந்து கொன்றுள்ளனர்.. இதற்காகவே கடலில் மிதந்த டால்பின்களை கொண்டு வர, பிரத்யேகமாக மோட்டார் படகுகள் தயார் செய்யப்பட்டு, நீண்ட வரிசையில் கடற்கரையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன...

செந்நிறம்
படகுகள் மூலம் 1,428 டால்பின்களை பிடித்து கரைக்கு எடுத்து வந்தனர். பிறகு அவற்றை ஒவ்வொன்றாக கொன்று குவித்தனர். டால்பின்களின் உடல்களில் இருந்து ரத்தம் உதிர்ந்து கொண்டே இருந்தது.. இதனால், கடற்பரப்பு முழுவதும் செந்நிறமாக காட்சியளித்தது...

கொடூரம்
இப்படி வடக்கு அட்லான்டிக் தீவு கூட்டத்தில் குவியும் டால்பின்களை வேட்டையாடுவது என்பது இறைச்சி, மருத்துவ பயன்பாடு மற்றும் பொழுதுபோக்கு அம்சமாக கருதப்படுகிறது. இத்தனை டால்பின்களை அநியாயமாக கொன்று குவித்துள்ளதை பார்த்து, உலக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த கொடூரத்தை பார்த்து கொதித்து போயுள்ளனர்...

கொந்தளிப்பு
என்னதான் பாரம்பரிய நிகழ்வு என்றாலும், இப்படியா டால்பின்களை கொல்வது? என்று கடல்சார் உயிரின பாதுகாப்பு அமைப்புகள் கடும் கோபத்துடன் கேள்வி எழுப்பி உள்ளன.. அதேவேளையில் தங்களின் உணவு தேவைக்காகவே டால்பின்களை கொல்வதாகவும், தங்கள் உரிமையை பாதுகாக்க போராடுவோம் என்றும் ஃபாரோ தீவு வாசிகள் தெரிவிக்கின்றனர்... டால்பின்களின் ரத்தக்குவியலுடன், கடற்கரையே சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கும் போட்டோக்கள்தான் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications