லெஸ்பியன் பார்ட்னருடன் சேர்ந்து 2 வயது மகனின் இதயத்தை சேதப்படுத்திக் கொன்ற தா(பே)ய்
பீபெ: ஸ்காட்லாந்தில் ஒரு தாய் தனது லெஸ்பியன்(ஓரினச்சேர்க்கை) பார்ட்னருடன் சேர்ந்து தனது 2 வயது மகனின் இதயத்தை சேதப்படுத்தி கொலை செய்துள்ளார்.
ஸ்காட்லாந்தில் உள்ள பீபெ நகரை சேர்ந்தவர் ரேச்சல் ஃபீ(31). அவரது மகன் லியாம் ஃபீ(2). ரேச்சலின் ஓரினச்சேர்க்கை பார்ட்னர் நயோமி ஃபீ(29). ரேச்சலும், நயோமியும் சேர்ந்து லியாமை குழந்தை என்று கூட பார்க்காமல் கொடுமை படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் எதுவும் அறியாத அந்த குழந்தையின் இதயத்தை சேதப்படுத்தி கொலை செய்துவிட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரேச்சல் மற்றும் நயோமியை கைது செய்தனர்.
இந்த வழக்கில் ரேச்சல் மற்றும் நயோமி குற்றவாளிகள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த இருவரும் லியாமை கொலை செய்தது தாங்கள் அல்ல என்றும் சிறுவன் ஒருவன் தான் கொன்றுவிட்டான் என்றும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரேச்சலும், நயோமியும் லியாமுக்கு பல நாட்கள் உணவு அளிக்காமல் வீட்டில் ஒரு அறையில் பூட்டி வைத்து எல்லாம் கொடுமைப்படுத்தியுள்ளனர். குழந்தையின் கையையும், காலையும் உடைத்து சிகிச்சை அளிக்காமல் வலியால் துடிக்கவிட்டு அதை பார்த்து கொடூரமாக ரசித்துள்ளனர் அந்த ராட்சசிகள்.












Click it and Unblock the Notifications