Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகை உறைய வைத்த மியான்மர் நிலநடுக்கம்: சிறைகளும் சிதைந்தனவா? ஆங் சாங் சூச்சி உயிருடன் இருக்கிறாரா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகையே உறையவைத்திருக்கிறது மியான்மர், தாய்லாந்து நிலநடுக்க பேரழிவுகள்.. தற்போதைய நிலையில் மியான்மர் பலி எண்ணிக்கை 2,000-த்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதனிடையே மியான்மர் நாட்டை நிலைகுலைய வைத்த இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான ஆங் சாங் சூச்சி உள்ளிட்டோர் அடைக்கப்பட்டுள்ள சிறைகளின் கதி என்ன என்பது உறுதியாக தெரியாத நிலை இருப்பதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மியான்மர் தலைநகர் சர்காயிங் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன. இந்த சக்திவாய்ந்த தொடர் நிலநடுக்கங்களால் மியான்மர் கட்டிடங்கள் சீட்டு கட்டுகளைப் போல சரிந்து விழுந்தன; வீடுகள் மண்ணோடு மண்ணாக புதையுண்டு போயின.

Earthquake Myanmar

மியான்மர் நிலநடுக்கத்தின் கோரத்தாண்டவத்தைத் தொடர்ந்து பல பகுதிகளில் அவசர நிலையை ஆளும் ராணுவ நிர்வாகம் அறிவித்துள்ளது. மியான்மருக்கு சர்வதேச நாடுகள் உதவிக்கரம் நீட்டி உள்ளன. மியான்மரின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் முதல் நாடாக நமது இந்தியா களமிறங்கி இருக்கிறது. இந்தியாவை சேர்ந்த மீட்பு மற்றும் நிவாரணப் பணி குழுவினர் நேற்று அந்நாட்டைச் சென்றடைந்தனர்.

தற்போதைய நிலையில் மியான்மர் நாட்டின் நிலநடுக்க பலி எண்ணிக்கை 2,000-த்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த கோர நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை அதிகபட்சமாக 10,000-த்தை எட்டிவிடும் என அச்சம் தெரிவிக்கின்றனர் வல்லுநர்கள்.

இதனிடையே மியானமர் நாட்டு ராணுவத்தால் சிறை வைக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சாங் சூச்சி உள்ளிட்டோர் கதி என்ன என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. 2021-ம் ஆண்டு சூச்சியின் ஆட்சியை கவிழ்த்து அவரை கைதது செய்தது மியான்மர் ராணுவம். 2 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்ட சூச்சி, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் மீண்டும் நேப்பிட்டோவில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டார். நிலநடுக்கம் கோரத்தாண்டவமாடிய இடத்தில் இருந்து நேப்பிட்டோ 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மியான்மர் நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் சிதையுண்டு போன நிலையில் நேப்பிட்டோ உள்ளிட்ட சிறைச்சாலைகளின் கதி என்ன என்பதும் கேள்விக்குறியாகி இருக்கிறது. ஆனால் ஆங் சாங் சூச்சி சிறை வைக்கப்பட்ட நேப்பிட்டோ சிறைக்கு எந்த பாதிப்பும் இல்லை; ஆங் சாங் சூச்சி நலமுடன் இருப்பதாக பிபிசி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+