உலகை உறைய வைத்த மியான்மர் நிலநடுக்கம்: சிறைகளும் சிதைந்தனவா? ஆங் சாங் சூச்சி உயிருடன் இருக்கிறாரா?
டெல்லி: உலகையே உறையவைத்திருக்கிறது மியான்மர், தாய்லாந்து நிலநடுக்க பேரழிவுகள்.. தற்போதைய நிலையில் மியான்மர் பலி எண்ணிக்கை 2,000-த்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதனிடையே மியான்மர் நாட்டை நிலைகுலைய வைத்த இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான ஆங் சாங் சூச்சி உள்ளிட்டோர் அடைக்கப்பட்டுள்ள சிறைகளின் கதி என்ன என்பது உறுதியாக தெரியாத நிலை இருப்பதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மியான்மர் தலைநகர் சர்காயிங் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன. இந்த சக்திவாய்ந்த தொடர் நிலநடுக்கங்களால் மியான்மர் கட்டிடங்கள் சீட்டு கட்டுகளைப் போல சரிந்து விழுந்தன; வீடுகள் மண்ணோடு மண்ணாக புதையுண்டு போயின.

மியான்மர் நிலநடுக்கத்தின் கோரத்தாண்டவத்தைத் தொடர்ந்து பல பகுதிகளில் அவசர நிலையை ஆளும் ராணுவ நிர்வாகம் அறிவித்துள்ளது. மியான்மருக்கு சர்வதேச நாடுகள் உதவிக்கரம் நீட்டி உள்ளன. மியான்மரின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் முதல் நாடாக நமது இந்தியா களமிறங்கி இருக்கிறது. இந்தியாவை சேர்ந்த மீட்பு மற்றும் நிவாரணப் பணி குழுவினர் நேற்று அந்நாட்டைச் சென்றடைந்தனர்.
தற்போதைய நிலையில் மியான்மர் நாட்டின் நிலநடுக்க பலி எண்ணிக்கை 2,000-த்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த கோர நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை அதிகபட்சமாக 10,000-த்தை எட்டிவிடும் என அச்சம் தெரிவிக்கின்றனர் வல்லுநர்கள்.
இதனிடையே மியானமர் நாட்டு ராணுவத்தால் சிறை வைக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சாங் சூச்சி உள்ளிட்டோர் கதி என்ன என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. 2021-ம் ஆண்டு சூச்சியின் ஆட்சியை கவிழ்த்து அவரை கைதது செய்தது மியான்மர் ராணுவம். 2 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்ட சூச்சி, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் மீண்டும் நேப்பிட்டோவில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டார். நிலநடுக்கம் கோரத்தாண்டவமாடிய இடத்தில் இருந்து நேப்பிட்டோ 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
மியான்மர் நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் சிதையுண்டு போன நிலையில் நேப்பிட்டோ உள்ளிட்ட சிறைச்சாலைகளின் கதி என்ன என்பதும் கேள்விக்குறியாகி இருக்கிறது. ஆனால் ஆங் சாங் சூச்சி சிறை வைக்கப்பட்ட நேப்பிட்டோ சிறைக்கு எந்த பாதிப்பும் இல்லை; ஆங் சாங் சூச்சி நலமுடன் இருப்பதாக பிபிசி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications