NATO நாடுகளில் குழப்பம்! ஈரான் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்காவுக்கு ஸ்பெயின் வார்னிங்!
மாட்ரிட்: ஈரான் மீதான தாக்குதல்களுக்கு ஸ்பானிஷ் இராணுவ தளங்களைப் பயன்படுத்துவதை ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் அமெரிக்கா தடை செய்துள்ளார். இதனால் நேட்டோ கூட்டமைப்புக்குள் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.
அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்த தங்கள் தளங்களைப் பயன்படுத்த ஸ்பானிய அரசாங்கம் தெளிவான தடை விதித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவ விமானங்கள் அண்டலூசியா மாகாணத்திலிருந்து வெளியேறின. ஸ்பெயினின் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் மானுவல் அல்பாரெஸ், ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு ரோட்டா மற்றும் மோரோன் ராணுவத் தளங்களைப் பயன்படுத்த கூடாது என்று உறுதியாக கூறினார்.

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் மற்றும் அல்பாரெஸ் உள்ளிட்ட உயரதிகாரிகள், அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களை நியாயமற்றவை மற்றும் ஆபத்தானவை என ஏற்கெனவே விமர்சித்திருந்தனர்.












Click it and Unblock the Notifications