காட்ராக்ட் பிரச்சனை இனி இல்லை- கண் புரையைக் காலி செய்ய வருகிறது சொட்டு மருந்து!
கலிபோர்னியா: காட்ராக்ட் எனப்படும் கண் புரை அறுவைச் சிகிச்சையில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இனிமேல் ஆபரேஷனே செய்யாமல் கண் புரையை அகற்றும் வழியைக் கண்டுபிடித்துள்ளனர் ஆய்வாளர்கள்.
ஆம், ஒரு புதிய சொட்டு மருந்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதை கண்ணில் ஊற்றி புரையை முற்றிலும் கரைந்து போகச் செய்கிறார்கள்.
கண்ணில் புரதம் அதிக அளவில் சேரும்போது ஒன்றாக சேர்ந்து புரையாக மாறி விடுகிறது. இதனால் கண் பார்வை மங்கலாகிறது. இதுதான் கண் புரையாகும். இதை அறுவைச் சிகிச்சை செய்து தற்போது அகற்றுகிறார்கள்.

அறுவை சிகிச்சை தேவை:
ஒரு கண்ணில் புரை வந்தால் மறு கண்ணிலும் கண்டிப்பாக வரும். அதையும் முதல் அறுவைச் சிகிச்சை முடிந்த ஒரு வருடத்திற்குப் பின்னர் அகற்றி விட வேண்டிய நிலை உள்ளது.இந்த நிலையில் இந்த பிரச்சினைக்கு சொட்டு மருந்து மூலம் சரி செய்யும் தீர்வை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இரண்டு சொட்டு போதும்:
கண் புரை வந்ததும் கண்டுபிடித்து விட்டால் இந்த சொட்டு மருந்து மூலம் அதைக் கரைத்து விட முடியுமாம். இது மிகவும் செலவு குறைந்த தீர்வும் கூட. ஒரு நாளைக்கு 2 வேளை இந்த சொட்டு மருந்தைப் போட்டு வர வேண்டும். இன்னும் ஐந்து வருடத்தில் இது பரவலாக நடைமுறைக்கு வந்து விடுமாம்.

வெற்றிகர அறுவை சிகிச்சை:
ஆய்வகச் சோதனைகளின்போது இந்த சொட்டு மருந்தானது, கண்புரையை கரைத்துள்ளதாம். மேலும் நோயாளிகள் பாதிப் பேருக்கு இது வெற்றிகரமாக இருந்ததாகவும் ஆய்வாளர்கள் கூருகின்றனர்.

பார்வை இழப்போர் அதிகம்:
தற்போது உலக அளவில் கண் புரையால் பார்வையை இழப்போர் அதிகம் உள்ளனர். எனவே கண் புரை வந்தால் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியது கட்டாயமாகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த லேனோஸ்டிரோல் என்ற கண் புரை கரைக்கும் சொட்டு மருந்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதை முதலில் நாய்களிடம் சோதனை செய்து பார்த்தனர். அதேபோல முயல்களுக்கும் சோதனை நடத்தப்பட்டது. பின்னர் மனிதர்களுக்கும் சோதனை செய்து பார்த்துள்ளனர்.

முழுமையான சோதனைகள்:
இந்த ஆய்வை சாண்டியாகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கவக ஆய்வுக் குழு உருவாக்கியுள்ளது. அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் முழுமையான சோதனைகள் முடிந்து விடும் என்று இந்தக் குவு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அடுத்து 5 அல்லது 7 ஆண்டுகலில் இது உலகம் முழுதும் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ஆய்வுக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்தின் ராயல் தேசிய பார்வையற்றோர் கழகத்தின் கிளாரா ஈக்ளன் கூறுகையில், "இது மிகவும் அருமையான அறிவியல் கண்டுபிடிப்பாகும். காட்ராக்ட் பிரச்சினைக்கு இது முடிவு கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications