இந்தியாவிலிருந்து யாரும் இந்த பக்கம் வராதீங்க.. நியூசிலாந்து பிரதமர் அதிரடி அறிவிப்பு.. காரணம் என்ன?
வெலிங்டன்: கொரோனா பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் இருந்து வரும் பயணிக்குத் தற்காலிக தடை விதித்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் உத்தரவிட்டுள்ளது.
உலகெங்கும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய, மத்திய கிழக்கு என அனைத்து நாடுகளிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதிலும் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1.26 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு மிக மோசமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவுக்கு தடை
இந்நிலையில், இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்குத் தற்காலிகமாகத் தடை விதிப்பதாக நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளது. ஆக்லாந்தில் செய்தியாளர்களிடம் பேசிய நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், இந்தியாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் தற்காலிகமாகத் தடை விதிக்கிறோம். இந்தியாவில் இருக்கும் நியூசிலாந்து குடிமக்களுக்கும் இது பொருந்தும். அவர்களுக்கும் நியூசிலாந்து திரும்பத் தடை விதிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பு அதிகம்
இந்தத் தடை உத்தரவு வரும் ஏப்ரல் 11ஆம் தேதி மாலை 4 மணி முதல் அமலுக்கு வருகிறது. நியூசிலாந்து நேற்று மட்டும் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்களில் 17 பேர் இந்தியாவில் இருந்து திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே தற்போது இந்தியாவில் இருந்து வருபவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அதன் பின்னர் இருக்கும் சூழ்நிலையைப் பொறுத்து முடிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்கு எதிரானது இல்லை
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் மேலும் கூறுகையில், இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகமாக உறுதி செய்யப்படுகிறது. பொதுவாக, கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள காரணங்களைக் கண்டறிந்து, அதைக் குறைக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இது எந்த ஒரு நாட்டையும் மட்டும் குறிவைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை இல்லை என்று அவர் தெரிவித்தார்.

நடவடிக்கைகள்
நியூசிலாந்து நாட்டில் உள்நாட்டு கொரோனா பரவல் என்பது முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 40 நாட்களில் நியூசிலாந்தில் உள்நாட்டு கொரோனா பரவல் முற்றிலுமாக தடுத்த நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலை மிக விரைவாகக் கட்டுப்படுத்திய நாடாக நியூசிலாந்து உள்ளது. அந்நாட்டுப் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் எடுத்த நடவடிக்கை காரணமாக நியூசிலாந்தில் மிக விரைவாகவே இயல்பு நிலை திரும்பியது.

நியூசிலாந்தில் கொரோனா பாதிப்பு
நியூசிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் எழு பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்தியாவில் நேற்று மட்டும் சுமார் 1.26 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 1.29 கோடியை தாண்டியுள்ளது. இதுவரை பதிவான ஒட்டுமொத்த கொரோனா உயிரிழப்பும் 1.66 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications