நான் சஹாரா ஹோட்டல்களை வாங்கலையே.. புரூனே சுல்தான் திடீர் பல்டி!
வாஷிங்டன்: ரூ. 14,170 கோடி கொடுத்து சஹாரா நிறுவனத்தின் அமெரிக்க ஹோட்டல்களை புரூனே சுல்தான் வாங்கப் போவதாக வெளியான தகவலை சுல்தான் தற்போது மறுத்து விட்டார். இதனால் சஹாரா நிறுவன அதிபர் சுப்ரதா ராய் சிக்கலில் மாட்டியுள்ளார்.
திஹார் சிறையை விட்டு வெளியே வர அவருக்கு ரூ. 15,000 கோடி தேவைப்படுகிறது. இதற்காக தனது நியூயார்க் மற்றும் லண்டனில் உள்ள 3 ஹோட்டல்களை விற்க அவர் முயற்சித்து வருகிறார்.
இந்த நிலையில் புரூனே சுல்தான், ரூ. 14,170கோடிக்கு சுப்ரதா வின் இரு ஹோட்டல்களை வாங்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதுதொடர்பான ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்தன. ஆனால் அதை புரூனே சுல்தான் தரப்பு மறுத்துள்ளது.

அதெல்லாம் இல்லை
இதுகுறித்து புரூனே சுல்தானின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், அப்படி எந்தத் திட்டமும் இல்லை. அப்படி எதுவும் நடைபெறவில்லை.

அரசும் வாங்கவில்லை, சுல்தானும் வாங்கவில்லை
புரூனே அரசு சார்பிலோ அல்லது சுல்தான் சார்பிலோ இந்த வாங்கும் நடவடிக்கையில் யாரும் இறங்கவில்லை, ஈடுபடவும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப் பெரிய பணக்காரர்
புரூனே சுல்தான் மிகப் பெரிய பணக்காரர். மிக மிக அதிக அளவிலான சொத்துக்களுடன் இருந்து வருபவர். மிக மோசமான சர்வாதிகாரி என்ற பெயரையும் பெற்றிருப்பவர். இவர் சஹாரா சொத்துக்களை வாங்கப் போவதாக தகவல்கள் வெளியானபோது பல மனித உரிமை அமைப்புகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

நியூயார்க்கில் எதிர்ப்பு
மேலும் நியூயார்க் ஹோட்டல்களை புரூனே சுல்தான் வாங்க அனுமதிக்க மாட்டோம் என்று அங்குள்ள மனித உரிமை ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

கலிபோர்னியாவில் ஹோட்டல் இருக்கு
ஏற்கனவே புரூனே சுல்தானுக்கு கலிபோர்னியாவில் பெவர்லி ஹில் என்ற ஹோட்டல் உள்ளது. அங்கு அடிக்கடி போராட்டங்கள் நடப்பது சர்வ சாதாரணமானது.

சஹாரா நிலைமை சிக்கல்
புரூனே சுல்தான் ஹோட்டல்களை வாங்கவில்லை என்று மறுத்து விட்டதால் சஹாராவுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது. சுப்ரதாவும் வெளியே வருவது தடைபட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications