76 நாள் லாக்டவுனுக்கு பிறகு.. கொரோனாவின் ஹாட்ஸ்பாட்டான வுகானில் முதல் முறையாக ஜீரோவான எண்ணிக்கை
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா எனும் தொற்றுநோய் பரவ காரணமாக இருந்த வுகான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் குணமடைந்து விட்டதால் நேற்றைய நிலவரப்படி அங்கு கொரோனா நோயாளிகள் யாரும் இல்லை என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Recommended Video
சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் வுகான் நகரில் கொரோனா எனும் நோய் மீன் சந்தையிலிருந்து பரவியதாக சொல்லப்படுகிறது. இது அங்கிருந்து உலக நாடுகளுக்கு பரவியதால் தொற்றுநோய் என அழைக்கப்படுகிறது.
இந்த நிலையில் கொரோனாவின் ஹாட்ஸ்பாட்டாக கருதப்படும் வுகான் மற்றும் ஹுபேய் நகரங்களில் கடந்த 23 ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா உலக நாடுகளுக்கு பரவும் வரை சீனா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் குற்றம்சாட்டியதை அடுத்து 56 மில்லியன் மக்கள் தொகை கொண்ட வுகானில் ஊரடங்கு கொண்டு வரப்பட்டது.

இயல்பு நிலை
இந்த நிலையில் சீனாவில் கொரோனாவால் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பத் தொடங்கியது. இதையடுத்து கடந்த ஏப்ரல 8ஆம் தேதி முதல் வுகான் நகரம் இயங்கத் தொடங்கியது. 76 நாட்கள் லாக்டவுனுக்கு பிறகு வுகான் நகரம் வழக்கம் போல் இயங்கத் தொடங்கியது.

எண்ணிக்கை
வெட் மார்க்கெட்களும் புழங்கத் தொடங்கின. இந்த நிலையில் அங்கு கொரோனாவின் 2ஆவது அலை வீசியது. இதனால் கொரோனாவால் சீனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,632 ஆக உயர்ந்துவிட்டது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 82,692 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா
நோய் பரவ காரணமாக இருந்த வுகானை எடுத்துக் கொண்டோமேயானால் ஏப்ரல் 16 ஆம் தேதி நிலவரப்படி கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 325 -லிருந்து 50,333 ஆக உயர்ந்துவிட்டது. அது போல் இறந்தோரின் எண்ணிக்கை 1,290-லிருந்து 3,869 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக யாரும் இல்லை
இந்த நிலையில் வுகான் மருத்துவமனையிலிருந்து 11 நோயாளிகள் கடந்த வெள்ளிக்கிழமை பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து வுகான் மருத்துவமனையில் கொரோனாவால் சிகிச்சை பெறுவோர் யாரும் இல்லை என்ற நிலை வந்துவிட்டது. அது போல் நேற்றைய நிலவரப்படி புதிதாக யாருக்கும் கொரோனா பாதிக்கப்படவில்லை.

டிரம்ப் புகார்
இந்த கொடூர வைரஸ் வுகானில் உள்ள வைரஸ் பரிசோதனை கூடத்திலிருந்து பரவியிருக்கலாம் என அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. அதுவும் சீனா வேண்டுமென்றே பரப்பிவிட்டிருப்பதாக அதிபர் டிரம்ப் புகார் கூறியிருந்தார். இந்த நிலையில் வைரஸ் பரவ காரணமாக இருந்த வுகானில் கொரோனா நோயாளிகள் யாரும் இல்லாதது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications