இந்தியாவில் அல் கொய்தா இருப்பதற்கான ஆதாரம் இல்லை: அமெரிக்க நிபுணர்
நியூயார்க்: இந்தியாவில் அல் கொய்தா அமைப்பு இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என அமெரிக்காவைச் சேர்ந்த தீவிரவாத தடுப்பு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கிளை துவங்கப் போவதாக தெரிவித்து அல் கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது குறித்து மத்திய அரசு உளவுத் துறையிடம் அறிக்கை கேட்டுள்ளது. மேலும் உளவுத் துறை மாநில அரசுகளை உஷாராக இருக்குமாறு எச்சரித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த தீவிரவாத தடுப்பு நிபுணரான பீட்டர் பர்கன் கூறுகையில்,

இந்தியா
இந்தியாவில் ஜவாஹிரி அல் கொய்தா கிளையை துவங்குவது வேடிக்கையானது. இந்தியாவில் ஜிஹாதிக்கள் உள்ளனர். ஆனால் அல் கொய்தாவினர் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை.

ஜவாஹிரி
அனைவரும் ஐஎஸ்ஐஎஸ் பற்றி தான் பேசுகிறார்கள், அல் கொய்தா பற்றியோ ஜவாஹிரி பற்றியோ பேசுவது இல்லை. அதனால் அவரை பற்றி நாம் பேச வேண்டும் என்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.

அல் கொய்தா
தாங்கள் கடந்த காலத்து கதையாகிவிட்டோம் என்பது அல் கொய்தாவினருக்கே தெரியும். அந்த வீடியோவில் ஜவாஹிரி பேசுவது போராக உள்ளது. அவராக அரை மணிநேரத்திற்கும் மேலாக பேசுகிறார்.

ஐஎஸ்ஐஎஸ்
அல் கொய்தாவை விட மீடியாக்கைள கையாள்வதில் ஐஎஸ்ஐஎஸ் திறமையாக உள்ளது. தங்களுக்கான இடம், பணம், ஆட்கள், மற்றும் மத்திய கிழக்கில் தங்கள் அமைப்பை விரிவு செய்வதில் ஐஎஸ்ஐஎஸ் வெற்றி பெற்றுள்ளது என்று பீட்டர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications