“பூதம்” - அது நம்மை நோக்கிதான் வருது.. வேலையை காட்டிய வடகொரியா? “ஆடிப்போன” ஜப்பான் -மக்கள் “அலர்ட்”
டோக்கியோ: வட கொரியா அடையாளம் தெரியாத புதிய வகை கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணை சோதனை செய்ததாக ஜப்பான் குற்றம்சாட்டி இருக்கிறது.
பசிபிக் தீபகற்பத்தில் அமைந்திருக்கும் முக்கிய நாடான வடகொரியா அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள், மேற்கத்திய நாடுகளுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. தொடர்ந்து பலமுறை ஏவுகணை சோதனையும் நடத்தி வருகிறது.
அதேபோல் அண்டை நாடான தென் கொரியாவையும் வட கொரியா அச்சுறுத்தி வருகிறது. அணு ஆயுத சோதனைக்கு தடை விதிக்கப்பட்டாலும் வட கொரியா அதை ஏற்காமல் சோதனைகளை தொடர்ந்து வருகிறது.

வட கொரியா
வட கொரியாவுடனான மோதல் போக்கை கைவிட அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தையும் நடத்தினார். அதன் பின்னர் ஏவுகணை சோதனைகளை குறைத்த வடகொரியா, மீண்டும் அதை தொடங்கி இருக்கிறது.

மீண்டும் தீவிரம்
இந்த ஆண்டின் தொடக்கத்திலும், பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் பலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்திக் காட்டியது வடகொரியா. இந்த நிலையில் தற்போது தென் கொரியா மற்றும் ஜப்பானுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஆயுத சோதனைகளை வட கொரியா முடுக்கிவிட்டுள்ளது.

கொரிய தீபகற்பம்
எனவே கொரிய எல்லையில், அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளின் கடற்படைகள் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக 3 நாடுகளையும் அச்சுறுத்தும் விதமாக அடுத்தடுத்து வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. கடந்த 25 ஆம் தேதி தேதியிலிருந்து 3 முறை ஏவுகணை சோதனையை நடத்தி இருக்கும் வட கொரியா 4 வது முறையாக இன்று சோதனை நடத்தியுள்ளது.

அதிர்ந்த ஜப்பான்
அடையாளம் தெரியாத கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் பலிஸ்டிக் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தி இருப்பதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை ஜப்பான் எல்லையின் மேற்பரப்பில் பறந்ததாக தெரிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் அலுவலகம், மக்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியது.












Click it and Unblock the Notifications