அமெரிக்காவில் திடீர் துப்பாக்கி சூடு.. ஒருவர் உயிரிழப்பு .. சுட்டது யார்?
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்காவின் தெற்கு ஹூஸ்டன் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒரு நபர் பலியாகியுள்ளார்.
ஹூஸ்டன் நகரிலுள்ள பல்கலைக்கழகம் அருகே மர்ம நபர் சுட்டதில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், சுட்டவர் குறித்தும், பலியானவர் குறித்தும் மேலதிக விவரம் வெளியாகவில்லை. தீவிரவாத தாக்குதலா, தனி மனித துவேஷத்தால் ஏற்பட்ட கொலையா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அறிந்ததும், ஹூஸ்டன் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சமீப காலமாக ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய நாடுகளில் தனி மனித தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்காவின் ஆர்லான்டோவில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது. அதேபோல பிரான்சிலும் சமீபத்தில் லாரியை ஏற்றி ஒரு நபர் 80க்கும் மேற்பட்டோரைக் கொன்று குவித்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications