அமெரிக்க அதிகாரி வெளியிட்ட புது தகவல்.. பின்லேடனுக்கு மகன் எழுதிய கடிதத்தத்தில் பகீர்
வாஷிங்டன்: ஒசாமா பின்லேடனின் மகன் எழுதிய கடிதம் குறித்த திடுக்கிடும் தகவலை அமெரிக்க விசாரணை அமைப்பான எப்.பி.ஐ முன்னாள் அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான 60 நிமிடங்கள் என்ற நிகழ்ச்சியில், முன்னாள் எப்.பி.ஐ அதிகாரி அலி சௌஃபான் என்பவர் அளித்த பேட்டியில் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவராக இருந்த ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா தனது தந்தை வழியில் மேற்கத்திய நாடுகளை அழித்துக்கட்டுவதாக உறுதியளித்த தகவல் இதனால் அம்பலமாகியுள்ளது.

பின்லேடன்
2011ம் ஆண்டில் பாகிஸ்தானின் அப்போதாபாத் நகரில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்தபோது, இரவோடு இரவாக ஹெலிகாப்டரில் உள்ளே நுழைந்த அமெரிக்க நேவி சீல் படையினரால் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கடிதம்
அப்போது அந்த வீட்டில் இருந்து ஹம்சா எழுதிய கடிதம் மீட்கப்பட்டுள்ளது. அதில் தனது தந்தையின் வழியில் தான் நடப்பேன் என உறுதியளித்து ஹம்சா எழுதிய கடிதமும் பறிமுதல் செய்யப்பட்டது.

ஜிகாத்
உங்கள் சிரிப்பு, உங்களின் முகம், நீங்கள் எனக்கு சொல்லிக்கொடுத்த வார்த்தைகள் அனைத்துமே நினைவிருக்கிறது. நான் இரும்பால் உருவானவனாக நினைத்துக்கொள்கிறேன். கடவுளுக்காக வாழ்வதே ஜிகாதிகள் வாழ்க்கை என அதில் கூறப்பட்டுள்ளது.

ஆடியோ வெளியீடு
இந்த கடிதத்தை எழுதியபோது ஹம்சாவுக்கு 22 வயது இருக்கலாம் என கூறப்படுகிறது. ஐரோப்பிய நாடுகள் மீதான அல்கொய்தா தீவிரவாதிகளின் தாக்குதல்களின்போது, ஹம்சா இதற்கான கட்டளையை பிறப்பித்த ஆடியோக்களை இங்கிலாந்து போலீசார் வெளியிட்டிருந்தனர்.

எச்சரிக்கை
தந்தையின் வழியில் ஹம்சா, உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்க கூடும் என அலி சௌஃபான் எச்சரிக்கைவிடுத்துள்ளார். தந்தையின் சாவுக்கு, அலி சௌஃபான் பழிவாங்க முயலக்கூடும் என்று எச்சரித்துள்ளார் அவர்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications