அமெரிக்க அதிகாரி வெளியிட்ட புது தகவல்.. பின்லேடனுக்கு மகன் எழுதிய கடிதத்தத்தில் பகீர்
வாஷிங்டன்: ஒசாமா பின்லேடனின் மகன் எழுதிய கடிதம் குறித்த திடுக்கிடும் தகவலை அமெரிக்க விசாரணை அமைப்பான எப்.பி.ஐ முன்னாள் அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான 60 நிமிடங்கள் என்ற நிகழ்ச்சியில், முன்னாள் எப்.பி.ஐ அதிகாரி அலி சௌஃபான் என்பவர் அளித்த பேட்டியில் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவராக இருந்த ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா தனது தந்தை வழியில் மேற்கத்திய நாடுகளை அழித்துக்கட்டுவதாக உறுதியளித்த தகவல் இதனால் அம்பலமாகியுள்ளது.

பின்லேடன்
2011ம் ஆண்டில் பாகிஸ்தானின் அப்போதாபாத் நகரில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்தபோது, இரவோடு இரவாக ஹெலிகாப்டரில் உள்ளே நுழைந்த அமெரிக்க நேவி சீல் படையினரால் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கடிதம்
அப்போது அந்த வீட்டில் இருந்து ஹம்சா எழுதிய கடிதம் மீட்கப்பட்டுள்ளது. அதில் தனது தந்தையின் வழியில் தான் நடப்பேன் என உறுதியளித்து ஹம்சா எழுதிய கடிதமும் பறிமுதல் செய்யப்பட்டது.

ஜிகாத்
உங்கள் சிரிப்பு, உங்களின் முகம், நீங்கள் எனக்கு சொல்லிக்கொடுத்த வார்த்தைகள் அனைத்துமே நினைவிருக்கிறது. நான் இரும்பால் உருவானவனாக நினைத்துக்கொள்கிறேன். கடவுளுக்காக வாழ்வதே ஜிகாதிகள் வாழ்க்கை என அதில் கூறப்பட்டுள்ளது.

ஆடியோ வெளியீடு
இந்த கடிதத்தை எழுதியபோது ஹம்சாவுக்கு 22 வயது இருக்கலாம் என கூறப்படுகிறது. ஐரோப்பிய நாடுகள் மீதான அல்கொய்தா தீவிரவாதிகளின் தாக்குதல்களின்போது, ஹம்சா இதற்கான கட்டளையை பிறப்பித்த ஆடியோக்களை இங்கிலாந்து போலீசார் வெளியிட்டிருந்தனர்.

எச்சரிக்கை
தந்தையின் வழியில் ஹம்சா, உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்க கூடும் என அலி சௌஃபான் எச்சரிக்கைவிடுத்துள்ளார். தந்தையின் சாவுக்கு, அலி சௌஃபான் பழிவாங்க முயலக்கூடும் என்று எச்சரித்துள்ளார் அவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications