பல நூறு கோடி செலவு.. இந்தியாவை உளவு பார்க்க பாகிஸ்தானின் புதிய விண்வெளி திட்டம்!
இந்தியாவையும், இந்திய ராணுவத்தின் செயல்பாட்டையும் கண்காணிக்கும் வகையில் பாகிஸ்தான் வரும் ஆண்டில் விண்வெளி திட்டம் ஒன்றை செயல்படுத்த இருக்கிறது.
Recommended Video

இஸ்லாமாபாத்: இந்தியாவையும், இந்திய ராணுவத்தின் செயல்பாட்டையும் கண்காணிக்கும் வகையில் பாகிஸ்தான் வரும் ஆண்டில் விண்வெளி திட்டம் ஒன்றை செயல்படுத்த இருக்கிறது.
இதற்காக அந்த நாடு சாட்டிலைட் அனுப்ப முயற்சி செய்து வருகிறது. இந்த சேட்டிலைட் மூலம் இந்திய ராணுவம் நகரும் இடங்களை எளிதாக கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
இது அந்த நாட்டின் பாதுகாப்பிற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்று அந்நாட்டு அரசு விளக்கம் கொடுத்து இருக்கிறது. போர் வரும் சமயங்களில் உதவும் என்பதற்காக, அவர்களின் விண்வெளி திட்டத்தில் நிறைய ராணுவம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

மாற்றம் செய்ய முடிவு
பொதுவாக பாகிஸ்தான், ராணுவம் தொடர்பான செயற்கைகோள்களை அனுப்பியதே இல்லை. இப்போதும் அவர்கள் நாடு அமெரிக்கா, பிரான்ஸ், சீனா போன்ற நாடுகள் கொடுக்கும் செயற்கைகோள் தகவல்களை நம்பியே இருக்கிறது. இதற்காக பாகிஸ்தான் மிகவும் அதிக அளவில் செலவு செய்கிறது. தற்போது இதைவிட்டுவிட்டு சுயமாக, பாதுகாப்பு துறைக்கு உதவும் வகையில் செயற்கைகோள் அனுப்ப முடிவு செய்துள்ளது.

வேறு சில திட்டங்கள்
இதன் முதற்கட்டமாக சில புதிய செயற்கைகோள்களை அனுப்ப அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி , 200 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் புதிய விண்வெளி திட்டங்களை செயல்படுத்த உள்ளது. ஆனால் என்ன மாதிரியான திட்டம் என்று ரகசியம் காக்கிறது. மேலும் 100 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில் புதிய பல்நோக்கு செயற்கைகோள் ஒன்றை அனுப்ப முடிவெடுத்து இருக்கிறது.

உளவு பார்க்க முடிவு
இந்நிலையில்தான் அந்நாடு இந்தியாவை உளவு பார்க்க முடிவெடுத்துள்ளது. இந்தியாவை உளவு பார்ப்பதற்காகவ 400 கோடியே 70 லட்சம் ரூபாயை பட்ஜெடில் ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது செயற்கைகோளா, வேறு விண்வெளி திட்டமா என்று அந்நாட்டு அரசு கூறவில்லை. ஆனால் விண்வெளி மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சிகளுக்காக இது உதவும் என்றுள்ளனர்.

விண்வெளி மையம்
ஆனால் பாகிஸ்தான் இந்த வளர்ச்சி பணிகளை இதோடு முடிக்கவில்லை. அந்நாடு புதிதாக விண்வெளி மையம் அமைக்க இருக்கிறது. இஸ்ரோவை விட பெரிய அளவில் இதற்காக கட்டிடம் எழுப்ப உள்ளது. கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத் ஆகிய இடங்களில் விண்வெளி மையங்கள் அமைக்க சில கோடி ரூபாயை பாகிஸ்தான் ஒதுக்கியுள்ளது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications