பின்லேடன் ஒரு தியாகி.. அமெரிக்காதான் அத்துமீறியது.. பாக். பிரதமர் இம்ரான் பரபர கருத்து.. திருப்பம்!
இஸ்லாமாபாத்: தீவிரவாதி ஒசாமா பின்லேடன் ஒரு தியாகி என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்து இருக்கிறார். அவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையாக முடிந்துள்ளது.
Recommended Video
பாகிஸ்தானில் அபோதாபாத் என்ற இடத்தில் தலைமறைவாக இருந்த தீவிரவாதி ஒசாமா பின்லேடன் கடந்த 2011ம் ஆண்டு மே 2ம் தேதி கொல்லப்பட்டார். அமெரிக்கா ராணுவம் இரவோடு இரவாக அவரின் வீட்டிற்குள் புகுந்து அவரை சுட்டுக்கொன்றது.
அது நாள் பின்லேடன் எங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் உலக நாடுகளை ஏமாற்றி வந்தது. பாகிஸ்தானுக்கே தெரியாமல் அமெரிக்கா தனது படைகளை உள்ளே அனுப்பி இந்த தாக்குதலை நடத்தியது.

இம்ரான் பேச்சு
இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசி இருக்கிறார். அதில், அல்கொய்தா தலைவர் பின்லேடன் பாகிஸ்தானில் கொல்லப்பட்டார். அவர் ஒரு தியாகி. அமெரிக்க ராணுவம் அபோதாபாத் உள்ளே வந்தது. பாகிஸ்தானையே கேட்காமல் அத்துமீறியது. இதனால் ஒசாமா வீரமரணம் அடைந்தார். இதனால் இரண்டு நாட்டு உறவு மோசமாக பாதிக்கப்பட்டது.

மோசமான பாதிப்பு
அதன்பின் உலகம் முழுக்க பாகிஸ்தானை எதிர்த்தது. பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகள் கடுமையாக பேசியது. பாகிஸ்தானின் நட்பு நாடாக இருந்த அமெரிக்கா எங்களிடம் அறிவிக்காமல் எங்கள் எல்லைக்குள் வந்து இருக்கிறது. எங்களிடம் கேட்காமல் எங்களின் நட்பு நாடு ஒன்று எல்லைக்குள் உள்ளே வந்து தாக்குதல் நடத்தி இருக்கிறது . இதை நாங்கள் எப்படி எடுத்துக் கொள்வது.

பலி போர்
இந்த தீவிரவாத போரில் மட்டும் நாங்கள் 70 ஆயிரம் வீரர்களை பலி கொடுத்து இருக்கிறோம். ஆனாலும் பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகள் மோசமான, அவமானத்திற்கு உரிய கருத்துக்களை பேசி வருகிறது. பாகிஸ்தான் மீது அமெரிக்கா அத்துமீறி டிரோன் தாக்குதலை நிகழ்த்தியது. எங்களிடம் அனுமதி கேட்காமல் எங்கள் எல்லைக்குள் வந்து தொடர்ந்து அமெரிக்கா டிரோன் தாக்குதல்களை நிகழ்த்தியது.

பாகிஸ்தான் எப்படி
தீவிரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா செயல்பட பாகிஸ்தான் உதவியது. ஆனால் பாகிஸ்தானுக்கு மிஞ்சியது எல்லாம் அவமானம் மற்றும் புறக்கணிப்புதான். பாகிஸ்தானை அமெரிக்கா நட்பு நாடாக பார்க்கிறதா அல்லது எதிரி நாடாக பார்க்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் எங்கள் மீது பழியை தூக்கி போடுவதில் அமெரிக்கா கவனமாக இருப்பது மட்டும் தெரியும் என்று இம்ரான் கான் பேசி இருக்கிறார்.

கடும் அதிர்ச்சி
இந்த நிலையில் இம்ரான் கானின் பேச்சு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் வெளிப்படையாக அமெரிக்காவிற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளது. அதிலும் மிக முக்கியமாக, ஒசாமாவை தியாகிஎ ன்றெல்லாம் சொல்லி தீவிரவாதத்திற்கு ஆதரவாக பேசி உள்ளது. பாகிஸ்தானின் இந்த திடீர் பகீர் நிலைப்பாடு காரணமாக அமெரிக்கா கடும் கோபத்தில் உள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications