பாவம்தான்.. சீன கொரோனா தடுப்பூசி போட்டு 2 நாள்தான் ஆச்சு.. இம்ரான் கான் நிலைமையை பார்த்தீங்களா!
இஸ்லாமாபாத்: சீன நாட்டு கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட 2 நாட்களில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இது அந்த நாட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது பாகிஸ்தான். இதுவரை 615,810 கோவிட் -19 கேஸ்கள் அங்கு பதிவாகியுள்ளன.
உண்மையிலேயே இன்னும் அதிகப்படியான மக்கள் அந்த நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு நன்கொடை
இந்த நிலையில், சீனா பிப்ரவரி 1ம் தேதி 500,000 டோஸ், சினோபார்ம் கொரோனா தடுப்பூசியை பாகிஸ்தானுக்கு நன்கொடையாக அளித்தது. இதனால் பிப்ரவரி 2ம் தேதி முதல், முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை பாகிஸ்தான் ஆரம்பித்துள்ளது.

முதியோருக்கு முதலில் தடுப்பூசி
முதலில் வயதானவர்களிடமிருந்து தொடங்கி மார்ச் 10ம் தேதி முதல் பொதுமக்களுக்கு கோவிட் -19 தடுப்பூசிகளை அறிமுகப்படுத்தியது. பிப்ரவரி தொடக்கத்தில் சுகாதார ஊழியர்கள் டோஸ்களை பெறத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

2 நாட்கள்தான்
இந்த நிலையில்தான் 2 நாட்கள் முன்பு பிரதமர் இம்ரான் கானுக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆனால், இன்று இம்ரான் கானுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தேசிய சுகாதார சேவைகள், ஒழுங்குமுறைகள் மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பான பிரதமரின் சிறப்பு உதவியாளராக இருக்கும் பைசல் சுல்தான் இதை உறுதிப்படுத்தினார்.
|
உறுதி செய்த ட்வீட்
சீன தடுப்பூசி சினோபார்மின் முதல் டோஸ் மார்ச் 18ம் தேதி இம்ரான் கானுக்கு செலுத்தப்பட்டது. இந்த நிலையில்தான், பைசல் சுல்தான் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இம்ரான் கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்தலில் உள்ளார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனத் தடுப்பூசி பலன் இல்லை
சீனா நன்கொடையாக 5 லட்சம் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை பாகிஸ்தானுக்கு நேற்று வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சீன தடுப்பூசியின் செயலாக்கம் அவ்வளவு சிறப்பாக இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். பிரேசில் நாட்டு புள்ளி விவரம் அடிப்படையில் பார்த்தால், 50 சதவீதம் அளவுக்குத்தான் சீனத் தடுப்பூசியால் பலன் கிடைக்கிறதாம்.

இம்ரான் கான் நிலைமை
இருந்தாலும் தடுப்பூசி போட்ட 28 நாட்கள் கழித்து ஒரு டோஸ் போட வேண்டியது அவசியம். இதன்பிறகும், 4 வாரங்களுக்குள்ளாகத்தான் படிப்படியாக கொரோனா எதிர்ப்பு சக்தி உருவாகும். ஆனால் இம்ரானுக்கு 2 நாட்களில் கொரோனா உறுதியாகியுள்ளதால், சீனத் தடுப்பூசி பலனளிக்கவில்லை என்று பொத்தாம் பொதுவாக கூறி விட முடியாது. ஆனால் இம்ரான் கான் 2 வாரம் முன்கூட்டியே தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

பாகிஸ்தானில் தடுப்பூசிகள்
சினோபார்ம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா தவிர, அவசரகால பயன்பாட்டிற்காக ரஷ்யாவின் ஸ்பூட்னிக் மற்றும் சீனாவின் கன்சினோ பயோலாஜிக்ஸ் இன்க் (கன்சினோபோ) தடுப்பூசிகளுக்கு பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications