மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு உதவ தயார்... சொல்றது நம்ம பங்காளி பாகிஸ்தான்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு உதவ தயார் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
Recommended Video

இஸ்லாமாபாத்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு உதவ தயார் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் கனமழையால் பேரிழப்பை சந்தித்துள்ளது. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் 400 பேர் வரை மரணித்துள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்துள்ளன.

கனமழை மற்றும் வெள்ளதால் கேரள மாநிலமே சின்னாபின்னமாகியுள்ளது. பேரழிவை சந்தித்துள்ள கேரளாவுக்கு பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி பல்வேறு நாட்டில் உள்ளவர்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மக்களுக்கு பாகிஸ்தான் மக்கள் சார்பாக பிராத்தனை தெரிவிக்கொள்வதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
மேலும் எந்த வகையான உதவியையும் பாகிஸ்தான் செய்ய தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார். பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் அண்மையில் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications