For Quick Alerts
For Daily Alerts
Just In
90 ஆண்டுகளுக்குப் பின் கருக்கலைப்புச் சட்டம்- பெருவில் அறிமுகம்
லிமா: பெரு நாட்டில் கிட்டதட்ட 90 ஆண்டுகளுக்குப் பின் கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் கருக்கலைப்பு செய்வது மிகப்பெரிய குற்றச்செயலாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால், கருக்கலைப்பு செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள பெண்களுக்கு இதனால் உயிரிழப்பு போன்ற பெரும் இழப்புகள் உண்டாகி வந்தது.
இதையடுத்து 90 ஆண்டுகளுக்குப் பின்பு தற்போது கருக்கலைப்புச் சட்டத்திற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இதற்கும் அவ்வரசு சில புதிய வழிமுறைகளை கூறியுள்ளது.
அதாவது, அதிகபட்சம் 22 வாரம் வரையிலான கருவுக்கு மட்டும் மற்றும் தாயின் உடல்நிலை பாதுகாப்பு அல்லது தாயின் உயிருக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத நிலையில் இருந்தால் மட்டுமே சட்டம் அனுமதி அளிக்கும் என இச்சட்டம் பற்றி அந்நாட்டு சுகாதார அமைச்சர் மிதோரி தெரிவித்துள்ளார்.
Comments
English summary
Peru has finally put into effect a 90-year-old law allowing abortions in certain cases, after the government issued a new decree on how to apply the law.The new guidance covers abortions at up to 22 weeks of pregnancy and only when a mother's health or life is in danger
Story first published: Tuesday, July 1, 2014, 15:00 [IST]