மோடிக்கு ஆப்கானிஸ்தானின் உயரிய சிவில் விருது! அஷ்ரப் கனி வழங்கி கவுரவிப்பு
ஹெரத் (ஆப்கானிஸ்தான்): ஆப்கானிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய `சிவில்' விருது வழங்கப்பட்டுள்ளது.
ஐந்து நாடுகளுக்கு இன்று அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். இதையொட்டி, முதல் நாளாக ஆப்கானிஸ்தான் சென்றுள்ளார். ஆப்கானிஸ்தான் ஹெராத் மாகாணத்தில் இந்திய அரசு உதவியுடன் புனரமைக்கப்பட்டுள்ள நட்புறவு அணையை அந்நாட்டு அதிபர் அஷ்ரஃப் கனியுடன் இணைந்து மோடி தொடக்கிவைத்தார்.
அப்போது, பிரதமர் நரேந்திர மோடியை சிறப்பிக்கும் விதமாக, ஆப்கானிஸ்தான் நாட்டின் உயரிய சிவில் விருதான ஆமிர் அமானுல்லா கான் விருது மோடிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி, பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவித்தார்.
இது குறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஷ் ஸ்வருப் டுவிட்டரில்,
பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆப்கானிஸ்தானின் உயரிய `சிவில்' விருது வழங்கப்பட்டுள்ளது. உண்மையான சகோதரத்துவம் கௌரவிக்கப்படுகிறது என்று பதிவிட்டுள்ளார்.
A true brotherhood is honoured. PM is awarded the Amir Amanullah Khan Award, Afghanistan's highest civilian honour pic.twitter.com/DdvASFSF62
— Vikas Swarup (@MEAIndia) June 4, 2016












Click it and Unblock the Notifications