பாகிஸ்தானில் மின்வயர் அறுந்து பஸ் மீது விழுந்து தீ விபத்து... திருமண கோஷ்டியினர் 8 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து மீது உயர்மின் அழுத்த மின்சார வயர் அறுந்து விழுந்தது. இதில் பேருந்து தீப்பிடித்ததில், அதில் பயணம் செய்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் உள்ளது டாடு மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள கைர்பூர் நாதன் ஷா நகரம் அருகே ஒரு 30 பயணிகளோடு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

Police says 8 die of electrocution in southern Pakistan

அப்போது, எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்து மீது உயர் மின்னழுத்த மின்சார வயர் அறுந்து விழுந்தது. இதில் பேருந்து தீப்பிடித்தது. இந்த தீவிபத்தில் பேருந்தில் பயணம் செய்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், காயமடைந்த 20 பேர் காயம் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பலியானோரில் 6 பேர் பெண்கள் ஆவார்கள். பேருந்தில் பயணம் செய்தவர்கள் திருமணம் ஒன்றில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+