பாகிஸ்தானில் மின்வயர் அறுந்து பஸ் மீது விழுந்து தீ விபத்து... திருமண கோஷ்டியினர் 8 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து மீது உயர்மின் அழுத்த மின்சார வயர் அறுந்து விழுந்தது. இதில் பேருந்து தீப்பிடித்ததில், அதில் பயணம் செய்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் உள்ளது டாடு மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள கைர்பூர் நாதன் ஷா நகரம் அருகே ஒரு 30 பயணிகளோடு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது, எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்து மீது உயர் மின்னழுத்த மின்சார வயர் அறுந்து விழுந்தது. இதில் பேருந்து தீப்பிடித்தது. இந்த தீவிபத்தில் பேருந்தில் பயணம் செய்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், காயமடைந்த 20 பேர் காயம் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பலியானோரில் 6 பேர் பெண்கள் ஆவார்கள். பேருந்தில் பயணம் செய்தவர்கள் திருமணம் ஒன்றில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications