ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் முன்பு பலுசிஸ்தானில் பாக். மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தும் பதாகைகள்

Subscribe to Oneindia Tamil

சுவிஸ்: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் முன்பாக பலுசிஸ்தானில் பாகிஸ்தானின் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தும் ஏராளமான பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் 42-வது கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் மனித உரிமை மீறல் விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.

Posters, banners on Pak rights violations in Balochistan at UNHRC

இலங்கையின் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய வளாகத்தில் அரசு சார்பற்ற நிறுவனங்கள் தனித்தனி கருத்தரங்குகளையும் நடத்தி வருகின்றன.

இந்த வளாகத்தில் பாகிஸ்தான் ராணுவம், பலுசிஸ்தானை ஆக்கிரமித்து அங்கு நிகழ்த்தி வரும் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தும் வகையில் ஏராளமான பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ராணுவம் புதைத்த கண்ணிவெடிகளில் சிக்கி பிஞ்சு குழந்தைகள் கல்வியை தொலைக்கும் சூழல் நிலவுவதையும் அப்பதாகைகள் வெளிப்படுத்துகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+