நிம்மதியா கக்கூஸ் போக முடியுதா?.. "அந்த இடத்தில்" லபக்னு கடித்த பாம்பு.. அடுத்து நடந்த ட்விஸ்ட்!
கோலாலம்பூர்: மலேசியாவில் பாத்ரூமில் இயற்கை உபாதை கழித்துக் கொண்டே செல்போனில் கேம் விளையாடிய நபரின் புட்டத்தை பிடித்து மலைப் பாம்பு ஒன்று கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு காலத்தில் மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் பாத்ரூம் போகும் போது கையுடன் நாளிதழ்களை கொண்டு செல்வார்கள். முக்கி திடக்கழிவை வெளியே தள்ளும் நேரத்தில் பேப்பரை படித்து விடலாம் என்ற ஒரு எண்ணம்தான்.
ஆனால் இன்றைய நவீன காலத்தில் விரல் நுனியில் எல்லாம் கிடைக்கிறது .அதாவது ஸ்மார்ட் போனில் கிடைக்காத விஷயங்களே இல்லை எனலாம். ஸ்மார்ட் போனே "யப்பா என்னை ஆளவிடுங்க" என சொல்லும் வரை நம்மாட்கள் போனை விடுவதே இல்லை.

பாத்ரூம்
சரி பாத்ரூம் போகும்போதாவது சும்மா விடுறாங்களா அதுவும் இல்லை. சார்ஜ் காலியாகிவிட்டாலும் பவர் பேங்கில் இணைத்தாவது இயற்கை உபாதையை கழிக்க போகிறார்கள். போய்விட்டு போனை பார்த்துக் கொண்டிருந்தால் மலம் கழிப்பது தாமதமாகிறது. இதனால் மற்ற உறுப்பினர்கள் கதவை தட்டும் நிலை ஏற்படும்.

சிகரெட்
சிகரெட் பிடித்தால்தான் கக்கா வரும் என்ற காலம் போய் போனை கொண்டு சென்றால்தான் மலம் கழிக்க முடியும் எனும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படித்தான் மலேசியாவை சேர்ந்த டசாலி எனும் இளைஞர் பாத்ரூம் செல்லும் போது போனை கொண்டு சென்றார். அவர் அந்த போனில் கேம் விளையாடி கொண்டிருந்தார்.

புட்டத்தை கடித்த ஜந்து
அப்போது அவரது புட்டத்தை ஏதோ கடித்தது போல் இருந்தது. உடனே அதிர்ச்சி அடைந்த அவர் மலம் கழிப்பதை விட்டுவிட்டு என்னாச்சு என பார்க்கும் போது ஏதோ ஒரு ஜந்து அவரை நன்றாக கடித்து கொண்டிருந்தது. உடனே தனது பின்பக்கத்தை வேகமாக இழுத்தார். இதையடுத்து அவர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துவிட்டு, தனது பின்பக்கம் எப்படியிருக்கிறது என்பதை அறிய மருத்துவமனைக்கு சென்றார்.

வேகமாக இழுத்த இளைஞர்
கடித்தது மலைப்பாம்பு என்பதால் விஷத்தன்மை ஏதும் இல்லை. எனினும் அந்த பாம்பு கடித்ததால் காயத்திற்கு மருந்து போடப்பட்டது. எனினும் அந்த பாம்பின் வாயிலிருந்து தனது பின்பக்கத்தை வேகமாக இழுத்ததால் பாம்பின் பாதி பல் டசாலியின் பேக் பகுதியில் சிக்கிக் கொண்டது. இதை மருத்துவமனை ஊழியர்கள் எடுத்தனர்.

40 ஆண்டுகளில் இதுதான் முதல்முறை
இதுகுறித்து டசாலி கூறுகையில் நாங்கள் 40 ஆண்டுகளாக இந்த பகுதியில் வசித்து வருகிறோம். இது வரை இது போன்ற ஒரு அனுபவம் நடந்ததில்லை. இதுதான் முதல்முறை. குடியிருப்பு பகுதிக்குள் பாம்பு வருவது. இந்த பாம்பு கடியின் அதிர்ச்சியிலிருந்து மீளாத 28 வயது டசாலி, இரு வாரங்களுக்கு தனது வீட்டு கழிப்பறையை பயன்படுத்தாமல் உள்ளூரில் மசூதியில் உள்ள கழிப்பறையை பயன்படுத்தியதாக தெரிவித்தார். பாம்பு கடித்ததில் டசாலிக்கு எதுவும் ஆகவில்லை, ஆனால் பாம்பின் பல்தான் உடைந்துவிட்டது பாவம் (!).
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications