Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போலாந்தை தொடர்ந்து.. ருமானியாவுக்குள் நுழைந்த ரஷ்ய ட்ரோன்கள்! அலர்ட் மோடில் நேட்டோ படைகள்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: சமீபத்தில் போலாந்துக்குள் ரஷ்ய ட்ரோன்கள் நுழைந்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இதனை தொடர்ந்து மற்றொரு நேட்டோ நாடான ருமானியாவுக்குள்ளும் ரஷ்ய ட்ரோன்கள் நுழைந்திருக்கின்றன.

ரஷ்ய ட்ரோன் ஒன்று தங்களது வான்வெளியை அத்துமீறி நுழைந்ததாக ருமேனியா தெரிவித்துள்ளது. சனிக்கிழமையன்று உக்ரைனில் நடந்த ரஷ்ய தாக்குதலை கண்காணித்து வந்த ருமேனிய போர் விமானங்கள், உக்ரைனின் தெற்கு எல்லைக்கு அருகே அந்த ட்ரோனை கண்டுபிடித்ததாக தெரிவித்திருக்கின்றன.

Romania Russia NATO

இந்த அத்துமீறல் தவறுதலாக நடந்தது கிடையாது என்றும், இது ரஷ்யா போர் விரிவாக்கத்தின் ஒரு பகுதி என்றும் உக்ரைனிய அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி கூறியிருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ரஷ்யா இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ருமேனிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "டான்யூப் நதியில் உக்ரைனிய உள்கட்டமைப்புகள் மீது ரஷ்ய வான்வழித் தாக்குதல்கள் நடந்த பிறகு, எங்கள் ராணுவத்தின் இரண்டு F-16 போர் விமானங்கள் இரு நாடுகளின் எல்லையை கண்காணித்தன. அப்போது ரஷ்ய ட்ரோனைக் கண்டுபிடித்திருக்கின்றன. சிலியா வெச் கிராமத்திற்கு தென்மேற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் இந்த ட்ரோன் கண்டறியப்பட்டது. பின்னர் ட்ரோன் ரேடாரில் இருந்து மறைந்துவிட்டது" என கூறியிருக்கிறது.

ரஷ்ய ட்ரோன் மக்கள் வசிக்கும் பகுதிகளின் மீது பறக்கவில்லை. எனவே உடனடி ஆபத்தை ஏற்படுத்தவில்லை. இருப்பினும் வெளிநாட்டின் ட்ரோன் ஒன்று திடீரென எல்லைக்குள் ஊடுருவுவதை ஏற்க முடியாது.

போலந்தும் சனிக்கிழமை ரஷ்ய டிரோன்கள் குறித்து எச்சரித்திருந்தது. "நாங்களும் எங்கள் நேச நாடுகளின் விமானப் படைகளும் தடுப்பு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன. எங்கள் தரைப்படைகளும் உஷார் நிலையில் இருக்கின்றன" என்று போலாந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் X தளத்தில் பதிவிட்டார். ஆனால் போலாந்தை தாக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்று ரஷ்யா தெளிவாக கூறியிருக்கிறது. ட்ரோன் அத்துமீறல் தவறுதலாக நடந்ததாகவும் விளக்கியுள்ளது.

முன்னதாக போலாந்தில் ரஷ்ய ட்ரோன்கள் போலாந்தில் தென்பட்டதையடுத்து, நேட்டோ படைகள் திடீரென பயிற்சியில் இறங்கியிருக்கின்றன. டென்மார்க், பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் தங்கள் படைகளை ஒருங்கிணைக்க தொடங்கியிருக்கின்றன. மேலும் பல நாடுகள் இதில் சேரும் என சொல்லப்படுகிறது. நேட்டோவில் மொத்தம் 32 நாடுகள் உறுப்பினராக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+