இதுவரை இல்லாத அளவு! உக்ரைன் மீது உக்கிர தாக்குதல்.. 36 டிரோன், 122 ஏவுகணைகளை ஏவிய ரஷ்யா..31 பேர் பலி
மாஸ்கோ: உக்ரைன் மீது இதுவரை இல்லாத அளவிற்கு உக்கிரமான தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டுள்ளது. 18 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த தாக்குதலில் 36 டிரோன், 122 ஏவுகணைகளை ரஷ்யா ஏவியது. இதில் 31 பேர் பலியாகினர்.
உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அந்த நாடு மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. குட்டி நாடுதானே.. அடித்து துவைத்து விடலாம் என எண்ணி இந்த தாக்குதலை ரஷ்யா முன்னெடுத்தாலும், போரில் ரஷ்யாவுக்கு தண்ணி காட்டியது உக்ரைன். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நிதி உதவியும் ஆயுத உதவிகளையும் வழங்கியதால் ரஷ்யாவுக்கு கடும் பதிலடியை உக்ரைன் கொடுத்து வருகிறது.

இதனால், உக்ரைனை கைப்பற்றும் எண்ணம் ஈடேறாமல் ரஷ்யா தடுமாறி வருகிறது. இதனால் ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் ஓராண்டைக் கடந்தும் இப்போது தொடர்ந்து வருகிறது. இந்தப் போரில் இரு தரப்பிற்கும் இடையே பலத்த உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், இது சர்வதேச அளவிலும் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், உக்ரைன் மீது நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியது. உக்ரைனின் தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கில் உள்ள நகரங்கள் மற்றும் கீவ் உட்பட பல பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடைபெற்றது. 18 மணி நேரத்துக்கும் மேலாக இந்த தாக்குதல் நடைபெற்றது. இந்த தொடர் தாக்குதலில் ரஷ்ய ராணுவம் 36 டிரோன்கள் மற்றும் 122 ஏவுகணைகளை அனுப்பியது.
போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா நடத்திய மிகப்பெரிய வான்தாக்குதல் இதுவாகும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உக்ரைன் மீது ரஷ்யா 96 ஏவுகணைகளை அனுப்பியதே இதற்கு முன்னர் பெரிய தாக்குதலாக இருந்தது. உக்ரைனின் பல பகுதிகள் இந்த தாக்குதலில் நிலைகுலைந்தன. இதனால் அங்குள்ள மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் சுரங்கப்பாதை ரயில் நிலையம் உள்ளிட்டவை சேதமடைந்தன. இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி 31 பேர் பலியாகினர். மேலும் பலருக்கு படுகாயம் ஏற்பட்டது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications