உக்ரைன் அருகே விழுந்து நொறுங்கிய.. ரஷ்ய ராணுவ விமானம்! 65 பேர் சம்பவ இடத்திலேயே பலி
மாஸ்கோ: ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் உக்ரைன் கைதிகளை ஏற்றி சென்ற இலியுஷின்-76 விமானம் விழுந்து விபத்தில் சிக்கியுள்ளது. இதில் 65 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளுக்கு எதிராக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. ஓராண்டை கடந்தும் போர் நீடித்து வரும் நிலையில், உக்ரேனிய போர் கைதிகளை ஏற்றி சென்ற ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று விபத்தில் சிக்கியிருக்கிறது. ரஷ்யா தரப்பில் இதனை விபத்து என்று சொன்னாலும், உக்ரைன் ராணுவம்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக சொல்லப்படுகிறது. இந்த கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக விமானம் பெல்கோரோட் பகுதியில் விழுந்து நொறுங்கியிருக்கிறது.

பெல்கோரோட் பகுதி ரஷ்ய புவியியல் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். இது உக்ரைன் எல்லையை ஒட்டி அமைந்திருக்கிறது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவிலிருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் இது இருக்கிறது. கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து இப்பகுதி உக்ரேனியப் படைகளின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு உட்பட்டுள்ளது. எனவேதான் இது உக்ரைனின் நாச வேலையாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த விமானத்தில் உக்ரைன் கப்பலில் பிடிபட்ட 65 உக்ரேனிய கைதிகள் இருந்துள்ளனர். இவர்களை இடமாற்றம் செய்யவே விமானத்தில் அழைத்து செல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களுடன் விமானத்தில் ஆறு விமானப் பணியாளர்கள் மற்றும் மூன்று துணை ராணுவப் படை வீரர்கள் இருந்துள்ளனர். விபத்து குறித்து விளக்கமளித்துள்ள பெல்கொரோட் ஆளுநர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ், "விபத்துக்குள்ளான ராணுவ விமானத்தில் பயணம் செய்த அனைவரும் இறந்துவிட்டனர். மக்கள் வசிக்கும் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது" என்று கூறியுள்ளார்.
விபத்துக்குள்ளான இலியுஷின்-76 ரஷ்யாவின் தனி சிறப்புமிக்க விமானமாகும். முதன் முதலில் 1970களில் பயன்பாட்டுக்கு வந்த இது, இப்போது வரை உலகின் சில நாடுகளில் பயன்பாட்டில் இருக்கிறது. 5 விமான பணியாளர்கள் உட்பட 90 பேர் வரை இதில் பயணிக்க முடியும். கரடு முரடான ஓடுபாதை இருந்தாலும் கூட இதனால் தரையிறங்கவும், மேலெழும்பவும் முடியும். இப்படிப்பட்ட விமானம் எப்படி விபத்தில் சிக்கியது? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications