போர் விமானங்களில் பறந்து.. இந்திய விமானப்படை விங் கமாண்டருக்கு இறுதி ராணுவ மரியாதை செலுத்திய ரஷ்யா!
மாஸ்கோ: துபாயில் நடைபெற்ற ஏர் ஷோவில் தேஜஸ் போர் விமானத்தில் சாகசத்தில் ஈடுபட்டிருந்த, இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் நமன்ஷ் சியால், விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ரஷ்ய விமானப்படை, ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தியுள்ளது.
ரஷ்ய விமானப்படையின் 'ரஷ்யன் ஏரோபாட்டிக்' பிரிவினர் வானில் போர் விமானங்களில் பறந்து 'Missing Man Formation' முறையில், விங் கமாண்டருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

ரஷ்ய விமானப்படையில் உயிரிழந்த வீரர்களுக்கு இப்படித்தான் அஞ்சலி செலுத்தப்படும். விமானப்படை குழுவினர் ஒரு சிறப்பு வடிவத்தில் விமானங்களை இயக்கும் போது பிரிந்த வீரரின் விமானம் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு இடைவெளியை விட்டு செல்வார்கள். அல்லது விமானப்படை வீரர்களின் விமானங்கள் ஒன்றாக சேர்ந்து வானில் பறந்து கொண்டிருக்கும் பொழுது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு விமானம் மட்டும் திடீரென அந்த அமைப்பில் இருந்து பிரிந்து சென்று விடும். இது அந்த வீரர் உயிரிழந்து விட்டதை குறிக்கிறது. இதைத்தான் 'Missing Man Formation' என்று சொல்வார்கள். இந்த வகையில் தான் தற்போது ரஷ்ய விமானப்படை அஞ்சலி செலுத்தியிருக்கிறது.
கடந்த 21ம் தேதி துபாயில் நடந்த ஏர் ஷோ நிகழ்வின்போது தேஜஸ் போர் விமானத்தில், இந்திய விமானப்படையை சேர்ந்த விங் கமாண்டர் சில சாகசங்களை நிகழ்த்தி காட்டினார். தேஜஸ் விமானத்தின் முழு திறமையையும் இந்த கண்காட்சியில் வெளி கொண்டுவருவது நோக்கமாக இருந்தது. அந்த வகையில் தான் பயின்ற அனைத்து விஷயங்களையும் வானில் செய்து காட்டினார். ஆனால், எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதில் விங் கமாண்டர் நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்தார்.
Russian Aerobatic Team Honours Indian Air Force Wg Cdr Namansh Syal🇮🇳 With Final-Day Tribute at Dubai Airshow 2025. The Missing Man Formation. 💔
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) November 23, 2025
pic.twitter.com/4MXxcm4kvM
இந்த சம்பவம் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனை அடுத்து அவருடைய உடல் இன்று அவருடைய சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு முழு ராணுவ மரியாதை உடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
34 வயதான சியால், இமாச்சல பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள நாகரோட்டா பகவான் வட்டத்தில் உள்ள பாட்டியால்கர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2009 இல் இந்திய விமானப்படையில் இணைந்தார். இவரது மனைவியும் விமானப்படை அதிகாரி ஆவார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அவரது உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க, முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா!












Click it and Unblock the Notifications