அசத்தல்.. ஆய்வு கூடத்தில் உருவாக்கப்பட்டது முதல் மனித முட்டை! இழந்த உறுப்புகளை திரும்ப வர வைக்கலாம்
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் விஞ்ஞானிகள் சேர்ந்து மனித முட்டையை உருவாக்கி இருக்கிறார்கள்.
Recommended Video

நியூயார்க்: அமெரிக்கா மற்றும் பிரிட்டன் விஞ்ஞானிகள் சேர்ந்து மனித முட்டையை உருவாக்கி இருக்கிறார்கள். இதற்காகப் பல நாட்கள் அவர்கள் உழைத்துள்ளனர்.
பல்வேறு தோல்விகளுக்கு பிறகு இந்த வெற்றி அவர்கள் கைவசம் வந்துள்ளது. எடின்பர்க் மருத்துவமனை விஞ்ஞானிகள் மற்றும் நியூயார்க்கை சேர்ந்த ''செண்டர் ஆஃப் ஹியூமன் ரீ புரொடக்சன்'' அமைப்பின் விஞ்ஞானிகளும் சேர்ந்து இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தி இருக்கிறார்கள்.
இதன் காரணமாக மனித இனத்திற்குப் பெரிய நன்மை விளையும் என்று அந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

எலிகள் பூனைகள்
முதலில் இந்தச் சோதனைகள் எலிகளின் திசுக்கள் மூலம் நடத்தப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக எலிகளின் முட்டைகள் உருவாக்கப்பட்டது. பின் அந்த முட்டைகள் வெற்றிகரமாகச் சரியான சூழ்நிலையில் வளர்க்கப்பட்டது.

மனித முட்டைகள்
அந்த வெற்றிக்குப் பின் மனித திசுக்களை வைத்து மனித முட்டையை உருவாக்க முயன்றார்கள். ஆனால் இது முதலில் தோல்வியில் முடிந்தது. கடைசியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்தி உண்மையில் மனித திசுக்களின் முட்டைகளை உருவாக்கி இருக்கிறார்கள்.

வெற்றி வெற்றி
தற்போது இந்த முட்டைகள் வெற்றிகரமாக வளர்க்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு செல்களும் சரியான அளவு வளர்ச்சி அடைந்து இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது. உலகிலேயே முதல்முறை இப்படி மனித முட்டைகள் வெளியே வளர்க்கப்பட்டு உள்ளது.

நல்ல பயன்
இதன் மூலம் மனிதர்களை எல்லாம் உருவாக்க முடியாது. ஆனால் பல்வேறு நோய்களை எளிதாகக் குணப்படுத்த முடியும். மிகவும் எளிதாக இழந்த உறுப்புகளை மீண்டும் கொண்டு வர முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications