மலேசியா: புலிகள் இயக்கத்தை செயல்பட வைக்க முயற்சி- 2 எம்.எல்.ஏக்கள் உட்பட 7 பேர் கைது
கோலாலம்பூர்: மலேசியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை செயல்பட வைக்க முயற்சித்ததாக 2 சட்டசபை உறுப்பினர்கள் உட்பட 7 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளவர்கள் என சந்தேகிக்கப்படுவோர் நேற்று தேடி தேடி கைது செய்யப்பட்டனர். நேற்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை இக்கைது நடவடிக்கை நீடித்தது.

புலிகளுடன் தொடர்பு என்கிற குற்றச்சாட்டின் கீழ் மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மலாக்கா ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ஜி. சாமிநாதன், நெகிரி செம்பிலான் மாநிலம் சிரம்பான் ஜெயா சட்டசபை உறுப்பினர் குணசேகரன் முக்கியமானவர்கள் என கூறப்படுகிறது.
கெடா, கோலாலம்பூர் மற்றும் பேராக் மாநிலங்களில் தலா ஒருவரும் சிலாங்கூரில் மட்டும் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டிருக்கும் 2 எம்.எல்.ஏக்களும் ஜனநாயக செயல் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
இது தொடர்பாக புக்கிட் அமான் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு தலைவர் அயூப்கான் மைதீன் பிச்சை கூறியதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் செயல்பட வைக்க சில வெளிநாட்டு சக்திகள் முயற்சிக்கின்றன. இது தொடர்பாக ஓராண்டுக்கும் மேலாக நாங்கள் கண்காணித்து வந்தோம்.
மலேசியாவில் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம். ஆகையால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அயூப்கான் கூறினார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications