13 வயசுப் பையனை காதலால் 'கடித்த' 42 வயது டீச்சரம்மா கைது!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 13 வயது மாணவனிடம் அசிங்கமாக நடந்து கொண்ட, காதல் கொண்ட 42 வயது ஆசிரியை கைது செய்ய்பட்டுள்ளார். அவரை சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அவருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆசிரியை அந்தப் பள்ளியில் கடந்த 11 வருடமாக பணியாற்றுகிறார். அவருக்கு நான்கு குழந்தைகளும் உள்ளனர்.
அந்த ஆசிரியை மீது சிறுவனை பாலியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அவரது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.
அந்தப் பையன் உதட்டில் முத்தமிட்டது. இருமுறை அவனது தோள்பட்டை மற்றும் கழுத்தில் கடித்தது என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு இந்த செயல்களில் அந்த ஆசிரியை ஈடுபட்டாராம்.
இந்தப் பையன், ஆசிரியையின் மகன் விளையாடி வரும் கால்பந்து அணியில் விளையாடி வருபவன். அந்த பழக்கத்தில் ஆசிரியை வீட்டுக்கு வந்து போயுள்ளான். அப்போது தனியாக அவனுடன் பேசி தன் பக்கம் திருப்பப் பார்த்துள்ளார் ஆசிரியை. மேலும், பேஸ்புக்கிலும் அவனுடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அடிக்கடி சாட் செய்வாராம். மேலும் அடிக்கடி பூங்காவுக்கும் கூட்டிப் போவாராம். அப்போதுதான் இப்படி சேட்டை செய்தாராம்.
தனது மகனின் கழுத்தில் பல்லின் தடம் இருப்பதைப் பார்த்த அந்தப் பையனின் தாயார் என்னவென்று விசாரிக்க, ஆசிரியைதான் கடித்ததாக கூறியுள்ளான் அவன். இதையடுத்து அவர் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பிறகு ஆசிரியை கைது
செய்யப்பட்டார்.
மகன் வயதுள்ள சிறுவனிடம் இப்படி பாலியல் ரீதியாக ஆசிரியை நடந்த விதம் ஏற்கவே முடியாதது, கடுமையான கண்டனத்துக்குரியது என்று தண்டனை விதித்த நீதிபதி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications