For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

59 பேருடன் புறப்பட்ட இந்தோனேஷிய விமானம் மாயம்.. ரேடார் தொடர்பும் துண்டிப்பு!

Google Oneindia Tamil News

ஜகார்த்தா: இந்தோனேஷியாவின் ஸ்ரீவிஜயா விமானம் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில மணி நேரத்தில் அந்த விமானம் மறைந்ததாகவும் அது விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துவிட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள விமான நிலையத்திலிருந்து பார்னியோ தீவில் உள்ள பாண்டியநாக்கிற்கு ஸ்ரீவிஜயா எஸ்ஜே 182 என்ற போயிங் விமானம் காலை 7.40 மணிக்கு புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான கண்காணிப்பை இழந்தது.

Sriwijaya Air plane missing with 59 pasengers

இந்த விமானத்தில் ஒரு குழந்தை உள்பட 59 பேர் இருந்தனர். இந்த விமானத்தின் மூக்கு பகுதி கடலில் மூழ்கியுள்ளது போல் ஒரு படம் வெளியாகியுள்ளது.

தூரத்திலிருந்து ஏதோ ஒரு பொருள் மிதப்பது போன்று காட்சியளிப்பதால் அது விமானமாக இருக்கலாம் என கருதுகிறார்கள். விமானத்தில் இருந்த 59 பேரின் நிலை என்னவானது என தெரியவில்லை.

இந்த விமானம் 10 ஆயிரம் அடி உயரத்தை விட குறைவான உயரத்திலேயே மாயமானது. அதிலும் ஒரு நிமிடத்தை குறைந்த கால அளவில் மாயமானது. இந்த விமானம் 1994-ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இது 26 ஆண்டுகள் பழமையானது.

English summary
Sriwijaya Air plane from Indonesia missing with 59 passengers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X